மீனு சிறிது நேரம் நம்ம ஹீரோவ நல்லா திட்டிட்டு கோவிலை சுற்ற தீடீரென்று யாரோ அவளை பின்புறம் இருந்து அணைக்க திடுக்கிட்டு மீனு திரும்ப (வேற யாரும் இல்ல நம்ம கீர்த்தி தான்)
தாங்க்ஸ் டீ மீனா..யுவார் சோ ஸ்வீட்... என கீர்த்தி கொஞ்ச
சிறிது நேரம் அமைதிக்கு பிறகு மீனு சுதாரித்து நீயா? நான் கூட வேற யாரோன்னு பயந்திட்டேன்..
என்ன வேற யாரோவா? என கீர்த்தி கேட்க
நான் கூட அந்த இடியட் னு... சொல்ல ஆரம்பிக்கும் போதே சுதாரித்த மீனு இல்ல சடன் அ பயந்துட்டேன் னு சொல்லி சமாளிக்க...
(மனதிற்குள் எண்ணாச்சி எனக்கு நான் ஏன் சம்பந்தமே இல்லாம அவனை பத்தி யோசிக்கிறேன்... கடவுளே இனிமேல் நான் அவனை பாக்கவே கூடாது )ஏய் எண்ணாச்சி ? ஏன் இப்படி நிக்கிற? என கீர்த்தி வினவ
அது ஒன்னும் இல்ல நீ சொல்லு ஆமா அங்க என்ன நடந்திச்சி? அண்ணா ட பேசிட்டியா?
ம்.. என கீர்த்தி வெட்க பட
பாருடா.. என் பிரண்ட் கீர்த்தி யா இது?
ச்சீ போடி...
ஹலோ மேடம் இனிமேல் நீ என்ன போகத்தான் சொல்லுவ... அதான் உன்ன கூப்டு போக ஆள் இருக்கு ல என மீனு கண்ணடிக்க
ஏய் அப்டில்லாம் இல்லடி...
சரி அண்ணா எங்க? என மீனு வினவ?
அவரு கிளம்பிட்டாருடி...
அதுக்குள்ளயா?
உங்க அன்னன் இவ்ளோ நேரம் இங்க இருந்ததே ரொம்ப பெருசு... அவர் க்கு போன் வந்திச்ச்சி கிளம்பி போயிட்டாரு...
ஏய் அண்ணா வ பத்தி தெரியாதா? அண்ணா க்கு வேலை னு வந்துட்டா அதான் ரொம்ப முக்கியம்... முன்னடினாலும் பரவாயில்ல இப்போ அவருக்கு ஓய்ப் வேற வரபோறாங்க.. அதனால இன்னும் கொஞ்சம் அதிகமா ஹார்ட் ஒர்க் பண்ணணும்ல?
கோவமாக இருந்த கீர்த்தி மீனுவின் கடைசி வார்த்தையில் இருந்த கோவம் போயி வெட்கம் பூசிக்கொள்ள அந்நிலையை கலைக்கும் விதமாக மெசேஜ் வந்தது கீர்த்தியின் மொபைல் க்கு...
YOU ARE READING
நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)
Romanceகண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின்...