Ashvanth's home 🏠வழக்கம் போலவே கதிரவன் உதிக்க பறவைகள் இன்னிசை பாட எந்த சலனமும் இன்றி பொழுது அழகாக புலர்ந்தது....
கதிரவன் ஒளியில் தன் மலர்விழிகளை திறந்தாள் ஷ்ரேயா... அருகில் இருந்த அஷ்வந்தை பார்த்தாள்.. அவன் சிறு குழந்தை போல் தூங்கிக்கொண்டிருந்தான்..
அவனை பார்த்த ஷ்ரேயாற்கு இரவின் இனிமைகள் நினைவு வர அவள் இதழ்கள் லேசாக விரிந்தது🥰🥰... சிறிது வெட்கமும் ஒட்டிக்கொள்ள கண்ணம் சிவந்தாள்..
ஷ்ரேயா: பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி சின்ன குழந்தை மாதிரி தூங்குறாரு பாரு😍😍... என் சமத்து என அவன் நெற்றியில் முத்தமிட்டாள் 😘😘...
அஷ்வந்த் முறுபக்கம் திரும்பினாலும் தான்..
ஷ்ரேயா சிரித்தவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்...
.....................
சிறிது நேரத்தில் அஷ்வந்த் கண்விளித்தான்...இரவு அதிகமாக குடித்ததால் தலை பயங்கரமாக வலித்தது...
தலையை பிடித்த படியே எழும்பி இருந்தான்.. அவன் முன் ககோபி கப்பை நீட்டினாள் ஷ்ரேயா..
அஷ்வந்த்: thank u என வாங்கிக்கொண்டான்...
ஷ்ரேயா அவனை பார்த்து ஒரு வெட்க சிரிப்பை உதிர்த்து விட்டு சென்றாள்..
ஷ்ரேயாவின் சிரிப்பு அஷ்வந்திற்கு வித்தியாசமாக தெரிந்தது.. அவனுக்கு இரவு நடந்தது எதுவும் நினைவில் இல்லை.. சாதாரணமாகவே இருந்தான்..
குளித்து விட்டு வந்தவன் ஆபீஸிள்கு செல்ல ரெடியாகிகொண்டு கீழே சென்றான்..
ஷ்ரேயா சாப்பாடு பரிமாற சாப்பிட்டான்..
சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு புரையேற சத்தமாக இருமினான்..
ஷ்ரேயா: ஐயோ பார்த்துங்க மெதுவா சாப்பிடுங்க என தலையை தட்டி தண்ணீர் கொடுத்தாள்...
அஷ்வந்த் அவளை பார்த்தவன் வாங்கி குடித்தான்..
சாப்பிட்டு முடித்து விட்டு ஆபீஸிற்கு சென்றான்...
أنت تقرأ
கன்னம் நனைத்த கண்ணீர்
الخيال (فانتازيا)விருப்பமேதுமின்றி விதியின் முடிவில் இணையும் இரு இதயங்கள்❤️!!!