அஷ்வந்த் தன் ரூமில் தரையில் அமர்ந்திருந்தான்.. அவன் மனதில் ஷ்ரேயா நினைவுகளே இருந்தது....ஷ்ரேயா தன்ன்னுடன் இருந்த தருணங்களை நினைத்துப்பார்த்தான்...
அவளை முதன் முதலில் அறையில் வைத்து பார்த்த போது அவளுக்கிருந்த படபடப்பு ... அடுத்தடுத்து அவளுடன் நெருங்கிச்சென்ற தரூனங்கள்.. தேவ் அஷ்வந்த் தப்பு செய்றான் என்று சொல்லியும் அவள் நம்பாமல் அவன் பக்கம் நின்றது .. அவனுக்கு ஆக்சிடன்ட் ஆகிய போது அவள் அவனை பார்த்துக்கொண்ட விதம் அனைத்தையும் நினைத்து வருந்தினான்...
ஷ்ரேயா அது அவன் குழந்தை என்று சொன்னதை நினைத்துப்பார்த்தான் ..
அஷ்வந்த்: ஷ்ரேயா அது என்னோட குழந்தைன்னு சொன்னாளே.. நான் எப்போ
அவள் கூட ஒன்னா இருந்தேன்... எனக்கே தெரியாம தப்பு பண்ணிட்டேனா... என தலையில் கை வைத்து யோசித்தான் அவனுக்கு நினைவு வரவே இல்லை..தலையை போட்டு குழப்பி யோசித்தான்.. அப்போது ஆணி அடித்தாற் போல் அனாறு போதையில் அவளுடன் ஒன்றாக இருந்தது நினைவு வந்தது... தலையில் கைவைத்தான்...
ஷ்ரேயா அழுது சத்தியம் பண்ணதே நினைவிற்கு வந்தது... கண்களை மூடி அமர்ந்தான்... அதில் ஷ்ரேயாவின் அழுத முகமே வந்து விழுந்தது... அவனால் அதை பார்க்க முடியவில்லை...
அவனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது... தன் குழந்தையையே சந்தேகப்பட்டு விட்டோமே என மனசளவில் தவித்தான்.. அவனை நினைக்க அவனுக்கே அருவருப்பாக இருந்தது...
"என்னை நம்புங்க நான் உங்களுக்கு துரோகம் பண்ணல்ல..அது உங்க குழந்தைங்க"என அவள் சொன்னது மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது..
அவனால் முடியவில்லை எழூந்து சென்று புள் போட்டல் பியர் எடுத்து வந்து குடித்தான்... அவனுக்கு போதை ஏறவேஇல்லை... மீண்டும் ஒரு போட்டல் குடித்தான்...
குடித்த பிறகே ஷ்ரேயா நினைவு அதிகம் வந்தது
அஷ்வந்த்: ஐம் சாரி ஷ்ரேயா நான் தப்பு பண்ணிட்டேன் .. உன்மையா இருந்த உனக்கு துரோகம் பண்ணிட்டேன்... 😭😭 உன்னை மனசளவுல கொண்ணுட்டேன்.. நான் உன்மையா விரும்பினவள் என்னை விட்டுட்டு போன பிறகுதான் அதோட வலி புரிஞ்சது... மனசளவுள துடிச்சு போய்ருப்பேல்ல😭😭 எனை மன்னிச்சிடு ஷ்ரேயா.. நீ எனக்கு வேணும்... என் பழைய ஷ்ரேயா எனக்கு வேணும்... 😭
![](https://img.wattpad.com/cover/342137161-288-k158355.jpg)
YOU ARE READING
கன்னம் நனைத்த கண்ணீர்
Fantasyவிருப்பமேதுமின்றி விதியின் முடிவில் இணையும் இரு இதயங்கள்❤️!!!