அத்தியாயம் 11

461 12 1
                                    

அட அப்பா, அதிசயமா இருக்கு, எப்பையும் அம்மா பால் வாங்க போக சொன்னா நீ போ , ஏன் இவ்ளோ நேரத்துல எழுப்பரேன்னு சண்டை பிடிப்பீங்க? ஆனா இந்த ஒரு வாரமா நீங்களே கிளம்பரீங்க எதும் சொல்லாம🧐 ? என்று தூங்கி எழுந்து வெளியே வந்த பானு தூக்குப்போசியுடன் கிளம்பிய ரகுராமனிடம் கேட்க...

ஆமா நானும் நினைச்சேன் , என்னடா மனுஷன் திருந்திட்டாரோண்ணு🤔 என்று லலிதாவும் கூட்டுசேர்ந்த்தார் சமையலற்கட்டில் இருந்தபடியே .

என்னப்பா ஏதேனும் பொண்ணை செட் பாண்ணீடீங்களா🤭? எனக்கு சித்தி வரப்போராங்களா😱?

ஆமா .. இந்த மூஞ்சிக்கு நான் கிடைச்சது ஏதோ போன ஜென்மத்தில் இவரு பண்ணிய புண்ணியம் 😤, இதுல இன்னொன்னு வேற...

என்னப்பா அம்மா இப்படி உங்களை அசிங்க படுத்தீட்டாங்க😛?

அவ கிடக்கறா டா... இப்ப கூட உங்கப்பன் நான் துண்டை உதறி தோலில் போட்டுட்டு போன வாசல்ல 100 பேரு எனக்கு பொண்ணு கொடுக்க வரிசை கட்டி நிப்பாங்க... இவளுக்கு என்ன தெரியும் என்னைய பத்தி?

நிப்பாங்க நிப்பாங்க😠... கேளு பானு , எங்கப்பா ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்கு என்னைய பொண்ணு குடுக்கறதா பேசி வைச்சாச்சு.... ஆனா கட்டுனா லலிதாவா தான் கட்டுவேன், எனக்கு அவளை கட்டி வைங்க மாமான்னு எங்க வீட்டு வாசலில் தவம் கிடந்து என்னைய கட்டிகிட்டார்.

நான் ஒன்னும் உன்னைய பார்த்து கட்டிக்களை சண்டையில் பிரிஞ்சிட்ட உங்கப்பவும் எங்கம்மாவும் நம்ம கல்யாணத்தில் ஒன்னு சேரட்டுமேண்ணு தான்.

அப்போ நான் ஸ்கூல் , காலேஜ் படிக்கரச்சே I Love you லல்லு ன்னு என் பின்னாடியே சுத்துனது🤨?

அது நான் தெரியாத வயசுல பண்ண தப்பு, அதுக்கு தான் அனுபவிக்கிறேன் என்று அவர் சொல்லி முடிக்கவும்...
சமயல்கட்டிலிருந்து ஒரு குண்டா அவர் காலடியில் வந்து விழவும் சரியாக இருந்தது.

அடி ஆத்தி ஜஸ்ட் மிஸ்சு 😰, லல்லு குட்டி காலங்காத்தால இவ்வளவு கோவம் ஆகதும்மா😢... என்றவாறே பாத்திரத்தை கொண்டுபோய் சமயல்கட்டில் வைத்துவிட்டு பானு அறியாதவாரு காதல் மனைவியிடம் இரண்டு கொட்டுகளை இலவசமாக வாங்கிக் கொண்டார்😩.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now