அத்தியாயம் 36

233 9 0
                                    

அக்கா வ கல்யாணம் பண்ணிக்க போரவர் மாமா தானே ? என்ற சிவா வின் கேள்வியில் கௌசிக் மீரா இருவரும் ஒருத்தரை ஒருத்தர் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டனர்.

என்ன இவ பிளான்னை சொல்லிட்டாலே , இனி என்ன பண்றது என்பதாய் சிவா வை மீரா பார்க்க..

இந்த பொண்ணு என்ன சொல்றா?? என்பதாய் கௌசிக் பார்க்க..

குண்டை கொளுத்திப் போட்டவள் அசால்டாக அவர்களை ஏறிட்டாள்.

என்ன மாமா... மும்பை ல வளர்ந்தனால உறவு முறைகள் தெரியாதா என்ன?...இப்போ அக்கா கட்டிக்க போறவர் எனக்கு மாமா தானே... சோ மாமா வோட அண்ணா ,அதான் நீங்க ... நீங்களும் மாமா தானே... சரி தான??? என்று அவள் கிண்டலாய் கேட்ட பின்பு தான் இருவரும் இழுத்த மூச்சை வெளியிட்டனர்.

இவளிடம் ஏதேனும் பேசினால் வம்பு தான் என்பதை புரிந்து கொண்டவன் ,

போலாமா??

Oh yes மாமா...போலாம்... அக்கா உன் bag தான் வெயிட்ன்னு சொன்னியே மாமாட்ட கொடு மாமா எடுத்துக்கட்டும்...

வாய மூடு சிவா என்று சிறு குரலில் மீரா முணுமுணுக்க , அதை காதிலேயே போடதவளாய்... உன் பிரென்ட் தான... மாமா எல்லாம் தப்பா நினச்சுக்க மாட்டாரு... இல்லையா மாமா?

குடு மீரா...

இல்ல கௌசி... நானே எடுத்துப்பேன்...

அட ... குடுக்கா... என்றவாறு மீரா கையில் இருந்த bag கை புடுங்கி கௌசிக்கிடம் நீட்டினாள் சிவா..

என்னோடது trolly தான் மாமா... நானே உருட்டிட்டு வந்துடுவேன் என்று கௌசிக் கேக்க நினைக்காத கேள்விக்கும் பதில் அளித்தவள் ... ஏதோ நல்லவள் போல புன்னகைக்க , கௌசிக் எதும் பேசாமல் அங்கிருந்து திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

அவனது பின்னாலயே சென்று கொண்டிருந்தார்கள் இருவரும்...

சிவா ... ரொம்ப தான் டீஸ் பண்ற கௌசிக்க...

இது சும்மா டிரெய்லர் தான் மா... இனி தான் இருக்கு சார் க்கு... என் அக்கா வ அழுக வெச்சவரை எப்படி எல்லாம் வெச்சு செய்யணும்னு நான் பிளான் பண்ணி வெச்சிருக்கேன்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now