அத்தியாயம் 39

241 7 12
                                    

First of all sorry for the late update dears😔

அண்ணி கிளம்பலாமா? என்ற கேள்வியுடன் தங்கள் அறையின் முன் நின்ற தான்வியை ஒரு வித தயக்கத்துடன் பார்த்தனர் மீரா வும் சிவா வும்.

நேற்று சாயங்காலம் முதல் இருவரும் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளை மீண்டும் மீரா சொன்னாள்.

நாங்க எதுக்கு தான்வி... நீ போய்ட்டு வா...

நேத்து சொன்னது தானே அண்ணி... நீங்களும் வந்தா தான் நான் போவேன் ...இல்லைனா நானும் போகலை என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் தான்வி.

அதை கண்டு மீரா சிவா வை பாவமாய் ஒரு பார்வை " இதுக்கு மேல என்ன பண்றது " என்பது போல பார்க்க...
அவளை பார்த்து சரி போவோம் என்பது போல ஒரு தலை அசைப்பை கொடுத்த சிவா ...
சரி சரி... வரோம் ... நீ இப்படி முகத்தை வெய்காத... நல்லாவே இல்லை என்று அவளை கலாய்த்தபடியே சிவா வும் மீரா வும் தான்வி யுடன் கிளம்பினர் Airportக்கு... கனடா வில் இருந்து வரும் அகிலனை அழைத்து வர.

ஏனோ சிவா விற்கு அவனை அழைக்க செல்வது பிடிக்கவில்லை. கோவமா இல்லை தன்னை அவன் பார்த்த நிலையினால் தோன்றிய வெக்கமா என்று புரியவில்லை. நேற்று தான்வி Airport செல்ல வேண்டும் என்று சொன்னதிலிருந்து இவள் மறுப்பை தான் அளித்தாள்... தன் அக்கா விடமும் எதனால் என்ற விஷயத்தை சொல்லாது வர பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்லி இருந்தாள்.

ஆனால் இப்பொழுதோ தான்வி முகம் வாடாமல் இருக்க, பிடிக்கவில்லை என்றாலும் கிளம்பி ஆகிவிட்டது.

இதுநாள் வரை தாங்கள் சுத்திய benz காரை விட்டுவிட்டு அகிலனின் விருப்பமான ஜாகுவாரை தான்வி எடுக்க சொல்ல " இன்னும் இவர்களிடம் எத்தனை கார் இருக்கிறது " என்ற கேள்வி சகோதரிகள் இருவரின் உள்ளங்களிலும் மலைப்பை ஏற்படுத்தியது.

Airport உள்ளே நுழைந்தபோது ஆஜானுபாவாக ஒருவன் இவர்களை நோக்கி வந்தான்.

முகுந்த் bhaiya... kaise hain app?

(முகுந்த் அண்ணா ... எப்படி இருக்கீங்க நீங்க?)

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now