மீரா கையில் இருந்த பாக்கெட்டில் இருந்த சிப்சை எடுத்து வாயில் வைய்பதும், பாடலை ஒளிபரப்பிக் கொண்டு இருந்த தொலைக்காட்சியை ஒரு பார்வை பார்ப்பதும், கௌசிக் கை ஒரு பார்வை பார்ப்பதுமாக இருந்தாள்.
ஆனால் கௌஸிக்கோ அவளது செய்கைகளை கவனித்தான் இல்லை. அவனது லேப்டாப்பில் மூழ்கியுள்ளான் என்பது அவனது நெரிந்த புருவங்களில் உணர முடிந்தது...
கௌசிக், நான் உன்னிடம் என் மனதை சொல்லவே மாட்டேனா? விநாயகா ஏன் இப்படி பண்ற ? அவனை காதலித்து கொண்டு அதை வெளிப் படுத்தாமல் அவனுடன் நாட்பாய் பழகுவது எவ்வளவு கடினமாய் இருக்கு தெரியுமா? அவனிடன் என் காதலை சொல்லவும் பயமா இருக்கு.. நான் என்ன தான் செய்றது..? என்று மனதிற்குள் புலம்பியபடியே அவள் அமர்ந்திருக்க ,அதை கலைக்குமாறு அவளது தங்கை சிவ ரஞ்சனியிடம் இருந்து அழைப்பு வந்தது..
(சிவ ரஞ்சனி மற்றும் தன ரஞ்சனி இருவரும் மீராவின் சித்தப்பா வசந்தனின் மகள்கள்...முறையே ஒருத்தி கல்லூரி கடைசி வருட பரிட்சை எழுதியிருக்க, இரண்டாமவள் 11 வகுப்பு போகிறாள் )
கௌசிக்கிர்க்கு தான் பேசுவது வேலைக்கு தடையாய் இருக்கும் என்று தன் வீட்டுக்கு விரைந்து வந்தாள்..
சொல்லு சிவா... இந்நேரத்தில் கூப்பிட்டு இருக்கிறாய்?
அக்கா...
சொல்லு டி..
உன்னோட வீட்டுக்கு எதிர்க்க கௌசிக்குன்னு ஒருத்தர் இருக்கார்ல, அதான் மும்பை ல இருந்து வந்தவர், நல்ல பையன் என்று எல்லாம் சொன்னியே?
ஆ... ஆமா .. ஏன்? என்ற திணறலோடு மீரா வினாவ
உனக்கும் அவருக்கும் டும் டும் டும் பண்ணலாமா என்று பேசிட்டு இருக்காங்க...
சிவா சொன்ன சொற்கள் அவளது மூளையை ஸ்தம்பிக்க செய்தது.
அக்கா... ஹலோ...ஹலோ...
இ..இரு...இருக்கேன் சிவா...
லையன் கட் ஆகிவிட்டது என்று நினைச்சேன்..
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை