அத்தியாயம் 20

253 11 2
                                    

நீ வெளியே வாடா செல்லம்... அப்பறம் இருக்கு உங்க அம்மாக்கு... நம்ம செய்கின்ற சேட்டையில் உங்க அம்மா அப்பா வீட்டுக்கு ஓடிடனும் ..

ஓடுவாங்க ஓடுவானக... குறும்பு செஞ்சா ரெண்டு பேரு வாலையும் நறுக்கி கட்டி வைச்சிடுவேனாக்கும்...

பாரு தங்கம் , உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு... நீ ஒன்னும் கவலை படாதே உன் அத்தை இந்த மீரா இருக்கறப்ப உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை... நான் பார்த்துக்கறேன்...

பாரேன் மறுபடியும் உதைப்பதை... டேய் குட்டி , இவளை நம்பாத... அவ உன்னை பார்த்துக்க மாட்டா, நீ தான் அவளை பார்த்துக்கணும் .. அதனால் அம்மா சொல்ற பேச்சை கேளு...

என்று மீராவும் பானுவும்(ரகுராம் லலிதா தம்பதியரின் மகள்) பானுவின் வயிற்றில் நிறைமாதத்தில் இருந்த அவளது பிள்ளையிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.

சரி இரு உனக்கு காஃபி போடறேன்...

வேணாம் அக்கா ...  நான் இப்போ தான் எழுந்துன்ன  வீட்ல குடிச்சிட்டு வந்தேன்...

ஹே... எனக்கு ஹார்லிக்ஸ் கலக்க போறேன், உனக்கும் கொண்டு வரட்டா??

வேணாம் அக்கா... காஃபி ரெண்டு டம்பளர் குடுச்சேன்.. இனி ஸ்ட்ரைட்டா லஞ்ச் மட்டும் தான்...

அடியேய்... இப்படி பண்ணி உடம்பை கெடுத்துக்காத ...

இல்லக்கா லீவ் நாள் தானே , அப்பறம் ரொம்ப சோம்பலாக இருந்துச்சு அதான்..

என்னவோ... இப்போ தெரியாது... நல்ல சாப்பிடலைனா பின்னாடி கஷ்டப்படுவ .. ..

ஹ்ம்ம் ஹ்ம்ம்... இது கௌசிக் கின் டயலாக்... இன்னிக்கு அக்கா சொல்றாங்க.. என்று மனதில் நினைத்தாள் மீரா

சரி போ... எனக்கு பசிக்குது ... நான் போய் ஏதேனும் செய்யறேன் என்று எழுந்தாள்...

அக்கா நான் செய்யறேன் இருங்க...

தெய்வமே வேண்டாம்... நானே பாத்துக்கரேன்...

ஹ்ம்... என்னோட கையாள சாப்பிட உங்களுக்கு இன்னிக்கு கொடுத்து வைக்கவில்லை...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now