அத்தியாயம் 31

225 6 0
                                    

மீராவுடன் தான்வி அங்கிருந்து அகல... விஷ்ணு பாட்டியை பார்த்தான்.

இவ்வளவு நேரமாக தன் உள்ளத்தில் அழுத்திக்கொண்டு இருந்ததை அவரிடம் கேட்டு விட முடிவு பண்ணினான்.

பாட்டி...

சொல்லு கண்ணா...

இந்த பொண்ணு தான் அண்ணா.... அதாவது அகிலனுக்கு பார்த்திருக்கீங்களா?

ஆமா...

ம்ம்...

என்னாச்சு பா... சுரத்தே இல்லாம ம்ம் கொட்டுற...

அது என்னன்னா... இந்த பொண்ணு எப்படி அகி க்கு செட் ஆவா? You know... அகி வந்து... What to say... Hmm... அதாவது, அகி மும்பைலேயே படிச்சு வளர்ந்தவன், மேலும் அவன் foreign கூட போய்ட்டு வரான்... And his status , அவனோட environment எல்லாமே உயர்ந்தவை.

But just look at that girl பாட்டி, she is ... mmm...she is not a match for him..எல்லா விதத்திலும்...then why she??? என்று கௌசிக் கை நினைத்துக் கொண்டு அகிக்காக கேட்பது போல கேட்டான்..

விஷ்ணு ,கௌசிக் கை ஒரு ஹீரோ வா தான் பார்த்திட்டு இருக்கான்... எல்லா விதத்திலும் விஷ்ணு விற்க்கு கௌசிக் ஒரு ரோல் மாடெல் ஆகவே மாறி இருந்தான்... காலேஜ் டேஸ் ல இருந்து,கௌசிக் பத்தி அகிலன் சொல்லும் போதே அவனின் மீது ஏற்பட்டிருந்த மதிப்பு, கௌசிக் கம்பனி பொறுப்பேற்று அதை இவ்ளோ தூரம் உயர்த்தியதில் இருந்து , இதோ இங்க வந்து தன்னோடு இருந்த வரைக்கும் அவன் கண்ட கௌசிக்கின் திறமைகள் பார்த்து எத்தனையோ முறை வியந்திருக்கிறான்.

அது மட்டும் அல்லாது கௌசிக்கின் கம்பீரம்..அவனின் ஆளுமை ... அவனின் அழகு எல்லாமே விஷ்ணு ரசிக்கும் ஒன்று.

ஆனால் அப்படி பட்டவன் பக்கத்தில் மீரா வை நிறுத்தி பார்க்க கூட விஷ்ணு வின் மனம் ஒப்பவில்லை... மீரா வை முதல் பார்வையிலேயே கௌசிக் கானவல் என்று நினைக்க தோன்றாமல் போனது.. அதை தான் இப்படி வாய் விட்டு தன் ஆதங்கத்தை பாட்டியிடம் சொன்னான்.

அவனது கேள்விக்கு பாட்டி பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே, விஷ்ணு வின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கௌசிக், தான் பார்த்துக் கொண்டிருந்த file ஐ கீழே கோபமாக வைத்து விட்டு விஷ்ணு விடம் திரும்பினான்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now