கௌஷிக் வீட்டிற்க்குள் நுழைய ,"அவன் வருவானா ? வராமல் எப்பொழுதும் போல ஏதேனும் காரணம் சொல்லி வராமல் இருந்து விடுவானோ?" என்ற பதட்டத்தில் இருந்த பாட்டியின் முகம் தெளிந்தது.
அதே நேரம் தன் romance சை முடித்துவிட்டு அகிலனும் படி இறங்கினான்.
ஹாய் அண்ணா... என்று விஷ்ணு வும் , அகிலனும் கௌஷிக்கை கட்டிக்கொண்டு வாழ்த்து சொல்ல , கௌஷிக்கும் வாழ்த்தினான். அதேபோல் தான்வி, மற்றும் பாட்டியின் வாழ்த்துக்களும் கௌஷிக்குடன் பரிமாறப்பட்டது.
"சரி உட்காரு கண்ணா ,உனக்கு பிடிச்ச பாதாம் அல்வா பண்ணீருக்கேன் ...கொண்டு வர்ரேன் "என்று சின்ன பிள்ளை போல பாட்டி அடுப்படிக்கு விரைந்தார்.
அதே விரைவில் அவனுக்கு தட்டில் அல்வாவை கொண்டு வந்து நீட்ட,அதை பார்த்த விஷ்ணு தன் கையில் இருந்த காலி தட்டை பார்த்தான்.
வந்ததிலிருந்து அது சாப்பிடுப்பா, அதை சாப்பிடுப்பா என்று மாற்றி மாற்றி தட்டில் வைத்து தன்னை விழுந்து விழுந்து கவனித்த பாட்டி, அவன் போலி நல்ல இருக்கு பாட்டி இன்னொன்னு கிடைக்குமா? என்று கேட்க...
இதோ கொண்டு வர்ரேன் என்று நகர போனவர் , கௌஷிக்கை கண்டவுடன் , அங்கு இவன் ஒருவன் இருப்பதையோ , இவன் கேட்டதையோ மறந்து,கௌஷிக்கை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனது முக பாவனைகளை வைத்தே, அவன் எண்ணங்களை அகிலனும், தான்வியும் புரிந்து கொண்டு ,ஒரு கேலி சிரிப்போடு அவனை பார்த்தனர்.
மச்சா... என்ன பார்க்குற ?, இவ்வளவு நேரம் நம்மளை கவனுச்சவங்க ,இப்போ கண்டுக்கவே இல்லைனா...?
ஆமா டா...!!!!
பாட்டிக்கு கௌஷிக் அண்ணாவ கண்டுட்டா, நம்ம யாரும் கண்ணுக்கு தெரியமாட்டோம்.... உனக்கு இது தான் முதல் தடவைன்றனால இப்படி இருக்கு, எங்களுக்கு இது எல்லாம் பழகிடுச்சு...
அப்போ எனக்கு போலி...?
அட என் தீனிப்பண்டாரமே !!!என்பது போல அகிலன் விஷ்ணுவை பார்க்க , தான்வி அவன் தோளை இடித்தாள்.
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை