அத்தியாயம் 44

303 5 0
                                    

அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு எப்படியோ அங்கே இருந்த ரெஸ்ட் ரூம் மை வந்தடைந்தாள் மீரா.

இவள் சென்ற நேரம் அங்கிருந்த ஒரு பெண்ணும் வெளியே சென்றுவிட, மீராவிற்கு தேம்ப வசதியாய் போய் விட்டது.

ஆழுயரக் கண்ணாடியின் முன் நின்றவள் தன்னை பார்த்தாள்.

மெருன் கலர் கரம்களி டாப்சும், ப்ளூ ஜீன்சும் அணிந்து , தலைமுடியை குதிரை வால் போட்டிருந்தாள்.முகத்தில் தான்வி யின் உபயத்தால் லைட்டான makeup... என்று இருந்தவள் கண்முன் அவள் மறைந்து வசுந்தரா தோன்றினாள்.

மும்பை வந்ததிலிருந்து தான்வியோடு  சுற்றுவதால் அவளது துணிமணிகள் எல்லாம் பார்ப்பதாலும் , வசுந்தரா போட்டிருந்த அந்த துணியின் விலை எப்படியும் 5 திர்க்கும் மேல் சில ஆயிரங்களை தொடும் என்பது உறுதி...

மும்பை போவது உறுதி செய்தவுடன் , தன் சாயம் போன  மற்றும் பழைய துணிகள் மட்டும் போதும் என்று பெட்டியில் மீரா அடுக்க, அவளை மிரட்டி அவளது சித்தி  சில  துணிகள் வாங்கி தந்தார்... அது எவ்வளவு நல்லது என்று இங்கு வந்த பார்த்த போதே அவள் நினைத்து, தனது சித்திக்கு மனமார நன்றி கூறினாள்...

ஆனால் அவளிடம் இருக்கும்  மொத்த துணிகளின் விலையை சேர்த்தால் கூட வசுந்தரா போட்டிருந்த அந்த ஒற்றை துணியின் விலைக்கு ஈடாகுமா என்பது சந்தேகமே...

அதுமட்டும் இல்லாமல் அவளது நுனி நாக்கு ஆங்கிலம், தொழிலை கட்டிக்காக்கும் திறமை, கண்ணை கவரும் அழகு என்று அனைத்திலுமே அவளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் போதே மீரா விர்க்கு கூசியது.

இங்கு வந்ததிலிருந்து, கௌஸிக்கின் அழுமையையும், செல்வாக்கையும் கண்டு வியந்திருக்கிறாள்... அதனாலேயே சமீபமாய் அவனுக்கு தான் பொருத்தமானவள் தானா? என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் இன்று விடை கிடைத்தது... ஆனால் அது அவளால் ஏற்றுக் கொள்ள முடியாததாய் இருந்தது ...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now