அத்தியாயம் 23

222 8 2
                                    

அறைக்கு வந்தவுடன் மீராவின் அழுகை அதிகரித்தது...

சிறிது நேரம் சுவற்றில் சாய்ந்து அழுது கொண்டு இருந்தவள் ,

பைத்தியம் போல இருக்காத மீரா?
எதுக்கு அழற?
இது என்ன லவ் ஃபெயிலியரா?

என்று மனசாட்சி கேள்வி கேட்க..

ஆமா, இது லவ் ஃபெயிலியர் தானே..

வெங்காயம்... ஏண்டி அவன் உன்னை லவ் பண்றேன்னு சொல்லி இருக்கானா?
இல்ல அந்த வகையில் ஏதேனும் நடந்திருக்கானா?
அவன் ப்ரெண்ட் மாதிரி தான் பழகினான்... நீ தான் வசுந்தரா பேச்சை கேட்டு தப்பா நினைச்சுட்டு, இப்போ அழுதா யார் பொறுப்பு?

அப்போ உண்மையாவே கௌசிக் என்னை லவ் பண்ணலையா?

இல்லை...

அப்போ எதுக்கு நேத்து அப்படி நடந்துகிட்டான்?

ஏன் அவன் நீ படிக்கும்போது , சமைக்கும் போது முடி முகத்தில் விழுந்தால் ஒதுக்கி விட்டது இல்லையா?

விட்டிருக்கான்...

அப்போ எல்லாம் உனக்கு ஒன்னும் தெரியலை தானே.. ஆனா மனசுல நீ வேற மாதிரி நினைத்தவுடன் அவனின் தொடுகை உனக்கு வேற மாதிரி தோனியிருக்கு... அதனால் அவன் மேல தப்பு இல்லை...

உண்மை தான்.. நான் தான் தப்பாக நினச்சுட்டேன்... என்று மீண்டும் அழுக ஆரம்பித்தாள்...

இன்னும் என்ன?

அவன் லவ் பண்ணலை , ஆனா நான் அவனை காதலிக்கரேன்னே..?

அதுக்கு?

நான் என்னோட காதலை அவனிடம் சொல்லிட்டா என்ன?

என்ன என்ன? லூசு ,அவன் உன்னை ஒரு ப்ரெண்ட் ஆ மட்டும் தான் நினைக்கிறான்... இப்பொழுது நீ போய் உளறினால் அவன் என்ன நினைப்பான்... ஒத்துகிட்டா சரி... ஆனா அவன் உன் தோழமையையே விட்டுவிட்டான் என்றால்?

ஹையோ...  நான் பின்பு என்ன தான் பண்றது?

எப்பவும் போல அவனுடன் நட்போட இருந்து விடு..

என்னால முடியுமா?

முடியனும் ..இல்லைனா அவன் தோழமையும் போய்டும்..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now