அத்தியாயம் 30

228 8 0
                                    

பார்வையிலேயே விஷ்ணுவும் தான்வியும் தங்கள் மனதை பரிமாறிக் கொண்டிருக்க...

"விஷ்ணு" என்ற கௌசிக் கின் கண்டிப்பான குரலில் கலைந்தான் நம் காதல் மன்னன்.

அதிர்ந்து திரும்பி பார்க்க கண்களில் கண்டிப்புடன் நின்றிருந்தான் கௌசிக்..

அண்ணா... ஆ... அவங்க வந்துட்டாங்க... அதான் ... நான்...

என்று விஷ்ணு ஏதேதோ சொல்லி சாமாளித்து கொண்டிருக்க... அவனை முறைத்துவிட்டு  அவனை தாண்டி வந்துகொண்டிருந்த அம்பிகா பாட்டியை நெருங்கினான் கௌசிக்...

வாங்க என்றவாறு அவரின் ட்டிராலியை தன் கையில் வாங்கினான்..

கௌசி, நல்ல இருக்கியா ??? மூன்று மாதங்கள் மேல் பார்க்காமல் இருந்த பாசத்தோடு தன் பேரனை கேட்டார் அம்பிகா...

ம்ம்... நல்லா இருக்கேன்...
என்று எப்பொழுதும் போல ஒற்றை வார்த்தையில் அவனது பதிலை முடித்துக்கொண்ட தன் பேரன் அவருக்கு புதிதாய் தெரிந்தான்... என்று மீராவுடன் சேர்ந்து சிரித்து கொண்டிருக்கும் கௌஸிக்கை பார்த்தாரோ அன்றிலிருந்தே அவன் வேறு மாதிரிதான் இவர் கண்களுக்கு தெரிகிறான்.

அவன் முகத்தில் அந்த சிரிப்பை பார்க்க எத்தனை நாள் முயன்றிருப்பார்... ஆனால் ஒரு சிறு பெண் இவனை மாற்றி விட்டாளே... எல்லாம் அந்த அம்மனின் மகிமை... இந்த முறையும் நான் வந்திருக்க விஷயம் நல்ல விதமாக முடியனும் அம்மா... என்று மனதில் தன் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டார் .

ஹலோ பாட்டி , என்ற விஷ்ணு வை கண்டவர்...

அட விஷ்ணு.... எப்படி இருக்க... நல்லா பெரிய மனுஷன் ஆகிட்ட போலயே...

ஹாஹா ... ஆமா பாட்டி.. எப்படி இருக்கீங்க..?

நல்லா இருக்கேன் கண்ணா.. நீ எப்டி இருக்க, வீட்ல எல்லாரும் சௌகியமா?

எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி... அம்மா அப்பா இன்னிக்கு ஒரு நெருங்கின சொந்தக்காரங்க கல்யாணம் ,அதற்கு போய்ட்டாங்க... உங்களை கூப்பிட வராமல் போனதுக்கு ரொம்ப வருத்தப்பட்டாங்க...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now