அத்தியாயம் 45

553 6 12
                                    

போன அத்தியாயத்தில் பார்த்த அதே  பார்ட்டி நடக்கும் இடம்... 

விஷ்ணு மற்றும் தான்வியின் பாடலும் ஆடலும் முடிந்த பின்பு சற்று நேரம் கழித்து.

சரி சொல்லு அகி , நீயும் விஷ்ணுவும் சண்டை  போடறத  பார்த்தோம், என்னமோ ஏதோன்னு நாங்க பயந்து போய்ட்டோம் .ஆனா மறுபடியும் கொஞ்ச நேரத்துல இப்படி டான்ஸ் எல்லாம்...   

எதுக்காக சண்டை அப்பறம் எப்படி சேர்ந்தீங்க என்று தன் மனதில் இவ்வளவு நேரம் அரித்துக் கொண்டிருந்த  கேள்வியை தான்வி தன் அண்ணனை பார்த்துக் கேட்டாள்.

என்னடா சொல்லட்டா? என்று ஒரு நமட்டு சிரிப்போடு தான்வியின் அருகில் சோபாவில் அமர்ந்து ஸ்வீட்டை வாயில் வைக்கப் போன விஷ்ணுவை பார்த்து அகிலன் கேட்க, விஷ்ணு பதறினான்.

அதைக் கண்டு அங்கு அமர்ந்திருந்த கௌஷிக் புன்னகையோடு நிறுத்திக் கொள்ள, தருணும் பிரகாஷும் கொல்லென்று சிரித்துவிட்டனர். கூடவே அர்ஜுன்னும்.

அவர்களது சிரிப்புக்கு அர்த்தம் புரியாது பெண்கள் மூவரும் குழப்பத்துடன் அவர்களை பார்த்தனர்.

சொல்லிட்டு சிரிங்க பிசாசுகளா என்று தான்வி கடுப்புடன் கத்தினாள்.

அது ஒண்ணுமில்லை தாணு குட்டி , ட்ரிங்க்ஸ் பண்ணி ஏண்டா உடம்ப கெடுத்துக்கரீங்கன்னு கேட்டேன்.. அதுக்கு கோவப்பட்டு திட்டிட்டானுங்க... நல்லதுக்கு காலமே இல்லை பாரேன்.... என்று விஷ்ணு வேகவேகமாய் கூறிவிட்டு... வா டா நம்ம போய் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடலாம்  என்றபடி தான்வி கையை பிடித்து தூக்கினான்.

இதெல்லாம் நம்ப அவ என்ன குழந்தையா விஷ்ணு சார்...நீங்கள் அமருங்கள் என்று அகிலன் விஷ்ணுவை பிடித்து தன்பக்கம் இழுத்து அமர்த்தினான்.

அதே போல விஷ்ணுவின் வார்த்தைகளை அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தான்.

அதை கேட்டவுடன் தருணும் பிரகாஷும் விஷ்ணுவை குத்த ஆரம்பித்தனர் .

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now