அத்தியாயம் 42

248 6 2
                                    

மீரா அக்கா எழுந்திருக்கா... சித்தநேரம் கீழ தோட்டத்து ஊஞ்சல்ல விளையாடிட்டு வரலாம், போர் அடிக்குது.

நீ போயிட்டு வா டா...எனக்கு தலை வலிக்குது.

காத்தாட நடந்தா தலை வலி போய்டும் ... வா...

நீ தான்விய கூட்டிட்டு போ...

ஆமா, அவ சாப்டிட்டு போய் படுத்தவ தான் , உருண்டு உருண்டு தூங்கறா... என்று சிவா அலுத்துக்கொண்டாள்.

அப்போ நீயும் வா , இங்க படுத்துக்கோ என்று தன் அருகில் பெட்டை  தட்டிக் காமித்தாள் மீரா.

மதியம் சீக்கிரமாக வந்து விடுங்கள் என்று அகிலன் கூறியதற்கு ஏற்ப வெளியே சுற்றிவிட்டு நேரத்திலயே வீடு வந்து சேர்ந்துவிட்டனர் பெண்கள் மூவரும்.

சாயந்திரம் தான் பார்ட்டிக்கு போக வேண்டும் என்பதால் , தான்வி நான் போய் தூங்கறேன் , என்றுவிட்டு சென்றுவிட , மீராவும் தலைவலி என்று படுத்துவிட , மொபைல் பார்த்துக் கொண்டிருந்த சிவா விற்கு தான் சலிப்பு தட்டியது.

போ க்கா... எனக்கு தூக்கம் வரலை , நான் கீழயே போறேன் ... என்றுவிட்டு அறையிலிருந்து வெளிவந்தவள், தருணுடன் போனில் பேசிய படியே அறையில் இருந்து  வெளியே வந்த அகிலனின் கண்களில் விழுந்தாள்.

என்னடாது , நம்ம கோழி தனியா சுத்திட்டு இருக்கு... என்று எண்ணியபடியே ...

மச்சி நான் கொஞ்சம் பொறுத்து கூப்பிடறேன் டா... என்று போனை வெய்த்தான்.

தன்னை கண்டும் காணாதவள் போல தாண்டி செல்பவளை கண்டவன், 

ஹலோ மேடம் , ஒரு ஆளு இங்க நிக்கறது தெரியலையா ??

நின்று அவனை திரும்பி பார்த்தவள் , உங்க அளவு எனக்கு இன்னும் வயசாகலை , சோ கண்ணு நல்லவே தெரியும் மிஸ்டர் அகிலன் .

திமிரு ... உடம்பு முழுக்க திமிரு ... உன்ன வெச்சு செய்யறேன் பாரு...என்று எண்ணியவன் ....

அப்போ பேசிட்டு போலாம்ல...?

உங்க கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு..?

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now