முகுந்த் அனுப்பிய இடம் வந்திருக்க.. காரை விட்டு இறங்கிய கௌசிக்கின் கண்கள் தனியாய் நின்றிருந்த அந்த வீட்டில் பதிந்தது.
கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழையும் போதே ராஜும் வீரும் அங்கு ஃபக் கில் வந்து சேர்ந்தனர்.
சார்... Any problem?
அவர்களைப் பார்த்து ஆமாம் என்பது போல தலை அசைத்தவன் ,உள்ளே சென்றான்.
முதலில் அவன் பார்வையில் பட்டது மீராவின் வண்டி தான்.. வீட்டில் இருந்து பாட்டின் ஒலியும் கூடுதல் சத்தத்தோடு வெளியே கேட்க , இந்த வீடு தான் என்பதை உறுதிபடுத்தியவன், காலிங் பெல்லை தொடர்ந்து அமுக்கினான்..
அரை நொடியில் கதவு ராகுலால் திறக்கப் பட்டது. அவனைக் கண்டவுடன் கௌசிக் அதிர்ந்து தான் போனான்...
இவன் வீட்டிர்க்கா மீரா வந்திருக்கிறாள்..?
ஹலோ யாருங்க ...யாரு... என்று ராகுல் தனது வார்த்தைகளை முடிக்கும் முன்பே மூக்கில் குத்துவாங்கி கீழே விழுந்தான்.
விழுந்தவனை கழுத்தைப் பிடித்து தூக்கி சுவரில் பதித்த கௌசிக்..
மீரா எங்க டா?
என்று பல்லைகடித்துக் கொண்டு கோவத்தை உள்ளடக்கிய குரலில் கேட்ட நொடி ... ஏய் அவனை விடுடா ... யாரு டா நீ? என்றவாறு இன்னொருவன் வந்து கௌசிக்கை தடுக்க ,ராகுல் லை விட்டுவிட்டு அவனின் வயிற்றில் கௌசிக் விட்ட ஒரு குத்தில் அங்கேயே மடங்கி சரிந்தான்...
எங்க டா மீரா?? என்று மீண்டும் ராகுலிடம் வர... பேச முடியாமல் அங்கே என்று ஒரு அறையை கைகாட்டினான்..
கௌசிக் அந்த அறையை நோக்கி செல்ல , அந்த அறையில் இருந்து இருவர் வெளியே வந்தனர்.
எவனோ ஒருவன் தங்களை நோக்கி வருவதும்,பின்னால் தன் நண்பர்கள் கீழே விழுந்து கிடப்பதும் ,அவர்களை ஆஜானுபாகுவான இருவர் இழுத்து கொண்டுபோய் நடு ஹாலில் போடுவதையும் பார்த்தவர்கள் , ஒருவர் முகத்தை ஒருவர் பயத்தோடும் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டனர்.
YOU ARE READING
எனக்காகவே பிறந்தவள்
Romanceஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை