6 நஞ்சான உணவு

740 63 7
                                    

6 நஞ்சான உணவு

முகுந்தனின் அறையில் இருந்த இன்டர்காம் அலறியது. அதை எடுத்து பதில் அளித்த அவன்,

"சொல்லு, வாசு" என்றான்.

"முகுந்தன், என்னோட பிஏவுக்கான இன்டர்வியூ நாளன்னைக்கு நடக்க இருக்கு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் அதை கண்டக்ட் பண்ண போறோம்"

"சரி வாசு"

"பி ரெடி"

"யா, ஷூயூர்"

அழைப்பை துண்டித்தான் முகுந்தன். அவனுக்கு தெரியும், அந்த நேர்முகத் தேர்வில் அவன் செய்யப் போவது ஏதும் இல்லை என்று. ஏனென்றால், அது வாசுதேவனின் உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு. அதனால் அனைத்து கேள்விகளையும் கேட்டு, தனக்கு தோதான உதவியாளரை நிச்சயம் வாசுதேவன் தான் தேர்ந்தெடுப்பான்.

நேரம் கடந்து செல்ல, தனக்குள் ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தான் முகுந்தன். அவனது வயிறு கலங்குவது போல் இருந்தது. அவன் கடிகாரத்தை பார்க்க, மணி நான்கு என்றது. வாசுதேவனுக்கு  ஃபோன் செய்தான்.

"சொல்லு முகுந்தன்"

"வாசு, எனக்கு ரொம்ப அன் ஈஸியா இருக்கு நான் வீட்டுக்கு போகட்டுமா?"

"வீட்டுக்கு போக போறியா? உடம்புக்கு  என்ன பண்ணுது?"

"வயிறை கலக்குற மாதிரி இருக்கு, வாமிட் வர்ற மாதிரியும் இருக்கு"

"வீட்டுக்கு போய் என்ன செய்யப் போற? உன்னை கவனிச்சுக்க உன் வீட்ல யார் இருக்கா? ஹாஸ்பிடலுக்கு போ"

"ம்ம்ம்ம்"

தன் பையை எடுத்துக்கொண்டு  அறையை விட்டு வெளியே வந்த முகுந்தன், அலுவலகத்தை விட்டு வெளியேறினான். மணி நான்கே ஆனது என்பதால், அதிகமான போக்குவரத்து நெரிசல் இல்லை. அவனுக்கிருந்த உடல் நிலையில், கார் ஓட்டவே சிரமப்பட்டான். 'வீட்டிற்கு சென்று என்ன செய்யப் போகிறாய்?' என்று வாசுதேவன் கேட்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. முகுந்தனுக்கும் கூட அது பற்றி எந்த தெளிவும் இல்லை. ஆனால் அவனுக்கு வீட்டில் இருக்க வேண்டுமென்று தோன்றியது.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now