38 உண்மை நிலை
முகுந்தன் கூறியதை கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள் மீரா.
"குழந்தை பெத்துக்கலாமா?" என்ற நம்ப முடியாத கேள்வியைக் கேட்டான் அவன்.
தன் விழி விரித்து அவனை பார்த்தாள் மீரா. அவள் முகத்தைப் பார்த்து புன்னகைத்த அவன்,
"உன் உடம்பு சிலுத்திடுச்சு பாரு" என்று அவள் மேற்கையை லேசாய் தடவினான்.
அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாத மீரா, திருதிருவென விழித்தாள். குழந்தை பெற்றுக் கொள்வதா? உண்மையாகவா?
"உன்னோட பேரன்ஸும் என்னோட பேரண்ட்ஸும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க"
"நீங்க? நீங்க சந்தோஷப்பட மாட்டீங்களா?"
"நிச்சயமா சந்தோஷப்படுவேன். குழந்தை கருவில் எப்படி உருவாகுது அப்படின்னு ஒரு ஆர்டிக்கல் படிச்சேன். உலகத்திலேயே ரொம்ப அதிசயமான விஷயம் அது. இயற்கை தான் இந்த உலகத்தில பெஸ்ட் படைப்பாளி. அதை நான் ஆரம்பத்துல புரிஞ்சுக்காம விட்டுட்டேன். கோடிக்கணக்கான விந்து அணுக்களை ஜெயிச்சி, ஒரே ஒரு அணு மட்டும் ஜெயிச்சி, கருவா உருவாகுமாம். மனுஷனுடைய போராட்டம் நம்ம பிறக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பம் ஆகிடுது, இல்ல?"
அந்த மெல்லிய வெளிச்சத்தில், அவன் முகத்தில் தோன்றி மறைந்த அதிசய குறியை அழகாய் ரசித்துக் கொண்டிருந்தாள் மீரா.
"பேரண்ட்ஸோட டிஎன்ஏ தான் குழந்தையோட கேரக்டரை முடிவு பண்ணுமாம். அப்படின்னா, என்னோட குழந்தை, என்னை மாதிரியே தான் இருப்பான். ஆனா அவன் என்னை மாதிரி தனிமையை விரும்ப மாட்டான். ஏன்னு சொல்லு பாக்கலாம்?"
அவனுக்கு பதில் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா.
"ஏன்னா என் மகனோட அம்மா நீ..."
"இதுக்கு என்ன அர்த்தம்? உங்களை தனியா இருக்க விட்டதுக்காக அத்தையை குறை சொல்றீங்களா?"
"அவங்க நல்லவங்க... அளவுக்கு மீறி நல்லவங்க... அது தான் அவங்க பிரச்சனையே. நான் தனியா இருக்க விரும்புறேன்னு தெரிஞ்ச போது, அவங்க என்னை நாலு சாத்து சாத்தி இருக்கணும்" என்று சிரித்தான்.
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...