10 இனம் புரியா உணர்வு
விடி டிசைன்ஸ் அலுவலகத்தின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு, ஜானகிக்கு ஃபோன் செய்தாள் மீரா. அந்த அழைப்பை ஏற்றார் ஜானகி.
"என்ன ஆச்சு மீரா? முகுந்தனுக்கு ஒன்னும் இல்லையே?" என்றார் பதற்றத்துடன். ஏனென்றால் அன்று காலை தானே அவர் முகுந்தனிடமும் மீராவிடமும் பேசி, முகுந்தனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விவரத்தை தெரிந்து கொண்டார்? அதனால், மீண்டும் அவன் உடல்நிலை மோசமாகி விட்டதோ என்று எண்ணினார்.
"அவரு நல்லா தான் இருக்காருன்னு என்னால சொல்ல முடியாது" என்று சிரித்தாள் மீரா.
"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல" என்றார் மீராவின் சிரிப்புக்கு காரணம் புரியாத ஜானகி. ஏனென்றால், முகுந்தனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால், மீரா சிரிக்க மாட்டாள் அல்லவா? அப்படி என்றால் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது.
"அவர் மேனேஜரா வேலை செய்ற அதே விடி டிசைன்ஸ் கம்பெனியில எனக்கு வேலை கிடைச்சிருக்கு" என்றாள் மீரா.
"நிஜமாவா சொல்ற?" என்றார் குதூகலமாக.
"ஆமாம் அத்தை. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருக்காக காத்துக்கிட்டு இருக்கேன்"
"கடவுள் உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்கட்டும்"
"தேங்க்யூ அத்தை"
"அந்த கல்லொளி மங்கன் என்ன சொன்னான்?"
"எதுவும் சொல்லல. ஆல் த பெஸ்ட் கூட..."
"உனக்கு அங்க வேலை கிடைச்ச விஷயம் அவனுக்கு தெரியுமா?"
"எம்டி கூட சேர்ந்து இன்டர்வியூ பண்ணதே அவர் தான்" என்று சிரித்தாள் மீரா.
"உன்னை பார்த்து அவன் ரியாக்ட் பண்ணவே இல்லையா?"
"இல்ல அத்தை. நான் எங்க உறவுமுறையைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு எங்களுக்குள்ள ஒரு அக்ரீமெண்ட் இருக்கு"
"என்ன்னனது? அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அதுக்கு நீ ஒத்துக்கிட்டு இருந்திருக்க கூடாது மீரா" என்றார் கோபமாய்.
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...