34 இது நிரந்தரமா?

867 67 6
                                    

 34 இது நிரந்தரமா?

மாலை

விதேஷ் தனது அறையை கடந்து செல்வதை கவனித்த மீரா, அவனை அழைத்தாள்.

"விதேஷ்..."

"ஹலோ மேடம், காங்கிராஜுலேஷன்ஸ்"

"தேங்க்ஸ், நீங்க ஹவுஸ் புரோக்கர்னு கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு வாடகை வீடு வேணும்"

"என்ன பட்ஜெட்ல பாக்குறீங்க மேடம்?"

"இருபதாயிரம்... ஒரு பெட்ரூம் இருக்கிற சின்ன வீடா இருந்தாலும் பரவாயில்ல"

"சரிங்க மேடம், ஏதாவது வீடு இருக்கான்னு பாத்துட்டு சொல்றேன்"

"தேங்க்ஸ்" என்று தன் அறைக்கு சென்றாள் மீரா.

மீரா விதேஷுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த முகுந்தன்,  விதேஷுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்றான் விதேஷ்.

"சொல்லுங்க சார்"

"மீரா உன்கிட்ட என்ன கேட்டா?" என்றான்.

"வாடகைக்கு வீடு வேணும்னு கேட்டாங்க" என்று உண்மையை கூறினான்.

"வாடகை வீடா?" என்று தன் பல்லை கடித்தான் முகுந்தன்.

"ஆமாம் சார், 20000 ரூபாய் பட்ஜெட்டாம். சின்ன வீடா இருந்தா கூட போதும்னு சொல்லிட்டாங்க"

"யாருக்காக வீடு பார்க்க சொன்னா?"

"அது எனக்கு தெரியாது சார்"

"நான் சொல்ற வரைக்கும் நீ எந்த வீடும் பார்க்க வேண்டாம். நான் சொன்ன பிறகு பார்த்தா போதும்"

"சரிங்க சார்"

அழைப்பை துண்டித்தான் முகுந்தன். பெருமூச்சு விட்டு நடந்தான் விதேஷ். அப்பொழுது மணி 5:30. கடிகாரத்தை பார்த்த முகுந்தன், இன்று அவள் வீட்டுக்கு வரட்டும் என்று எண்ணிக்கொண்டான்.

ஆறு மணிக்கு தனது பையை எடுத்துக்கொண்டு முகுந்தன் தன் அறையை விட்டு வெளியே வந்த போது, அங்கு மீரா இருக்கவில்லை. எரிச்சல் அடைந்த அவன், நந்தகோபாலிடம்,

"மீரா எங்க?" என்றான்.

"மீராவும் வைஷ்ணவியும் கோவிலுக்கு போனாங்க"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now