42 அபாயம்

804 58 4
                                    

42 அபாயம்

மறுநாள் காலை

ஜனார்த்தனனும் வைதேகியும் சென்னைக்கு செல்ல தயாரானார்கள். முகுந்தனும் மீராவும் அவர்களை வழி அனுப்ப விமான நிலையம் சென்றார்கள்.

"எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ் மாப்பிள்ளை" என்றார் ஜனார்த்தனன்.

"நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. மீரா என்னோட வைஃப்" என்றான் மீராவை பார்த்தபடி.

"உங்க வரவுக்காக நாங்க காத்திருப்போம்" என்றார் வைதேகி.

அவருக்கு பதில் கூறாமல் முகுந்தனை ஏறிட்டாள் மீரா.

"நாங்க சீக்கிரமே சென்னைக்கு வருவோம், அத்தை" என்றான் முகுந்தன்.

"எங்க பொண்ணை சந்தோசமா வைச்சிருக்குறதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி" என்றார் வைதேகி மீராவின் முதுகை தட்டிக் கொடுத்தபடி.

அமைதியாய் நின்றான் முகுந்தன்.

"அம்மா, நான் என் மாமியாரை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க" என்றாள் மீரா.

"நிச்சயமா சொல்றேன்" என்றார் அவர்.

அப்பொழுது அவர்களது விமானத்தின் இறுதி அழைப்பு கேட்டது.

"நாங்க கிளம்பறோம்" என்றார் ஜனார்தனன்.

தன் மகளை கட்டி அணைத்து விடை கொடுத்தார் வைதேகி. அவர்கள் விமான நிலையத்தின் உள்ளே சென்றார்கள்.  அவர்கள் தங்கள் கண்களில் இருந்து மறையும் வரை அங்கேயே நின்ற முகுந்தனும் மீராவும், தங்கள் காரை நோக்கி நடந்தார்கள்.

"நம்ம ஆபீஸ்ல இன்னைக்கு பார்ட்டி இருக்கு" என்றான் முகுந்தன்.

"ஆமாம், நான் அதை மறக்கல" என்றாள் மீரா.

"ஆனா, இன்னைக்கு நீ ரொம்ப சிம்பிளான டிரஸ் போட்டுருக்கியே. இன்னைக்கு பார்ட்டிக்கு நீ புடவை கட்ட போறது இல்லையா?"

"நான் புடவை கட்டணும்னு நினைக்கிறீங்களா?" என்றாள்.

"இல்ல, நான் உன்னை எதுக்காகவும் கட்டாயப்படுத்த விரும்பல. ஆனா, புடவை கட்டுனா நீ ரொம்ப அழகா இருப்ப. உன்னை புடவை கட்டி பார்க்க எனக்கும் பிடிக்கும்" என்றான்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now