52 மர்ம மனிதன்
பார்கவியை வழி அனுப்ப அவளுடன் வெளியே வந்தார்கள் ஜனார்த்தனனும் வைதேகியும். அப்பொழுது அவர்கள் மனோகர் வருவதை பார்த்தார்கள்.
"பார்கவி, நீ என்ன இங்க?" என்றான் மனோகர் ஏதும் தெரியாதது போல.
"இங்க வீடு காலி இருக்குனு சொன்னாங்க. அதை பார்க்க வந்தேன்"
"இது யாரோட வீடுன்னு உனக்கு தெரியுமா?" என்றான் மனோகர் பொருள் பொதிந்த பார்வையோடு.
"இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன். இது முகுந்தனோட மாமனார் வீடு"
"முகுந்தனை பத்தி பார்கவி எங்க கிட்ட சொன்னாங்க" என்றார் ஜனார்த்தனன்.
"அப்படியா?" என்றான் மனோகர் ஆர்வத்துடன்.
"ஆமாம்" என்று தலையசைத்தார் ஜனார்த்தனன்.
"அவங்க கிட்ட நீ முகுந்தனை பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டியா?" என்றான்.
"ம்ம்" என்றாள் பார்கவி.
"நான் சொல்லல அங்கிள்? நான் முகுந்தனை பத்தி சொன்னப்போ நீங்க என்னை நம்பல. இப்பவாவது நீங்க என்னை நம்புவீங்கன்னு நினைக்கிறேன்"
"நீங்க எதை பத்தி பேசுறீங்க?" என்றார் ஜனாதனன்.
"நாங்க ஸ்கூல்ல படிச்ச போது முகுந்தன் என்ன செஞ்சான்னு பார்கவி உங்ககிட்ட சொன்னா இல்ல?"
"ஆமாம் சொன்னாங்க" என்றார் வைதேகி.
குழப்பத்துடன் பார்கவியை பார்த்தான் மனோகர்.
"ஒரு பொறுக்கி பையன் கிட்ட இருந்து அவங்களை முகுந்தன் காப்பாத்தினதா சொன்னாங்க"
பார்கவியை கோபத்துடன் ஏறிட்டான் மனோகர்.
"நான் கிளம்புறேன் ஆன்ட்டி" என்று பார்கவி அங்கிருந்து புறப்பட நினைத்தபோது,
"பார்கவி, முகுந்தன் என்ன செஞ்சான்னு நீ அவங்க கிட்ட சொல்லலையா? நீ பயந்துட்டியா? நான் இருக்கேன். நீ பயப்பட வேண்டாம்" என்றான்.
சரியாய் அதே நேரம், மீராவுடன் அங்கு வந்தான் முகுந்தன்.
மனோகரையும், பார்கவியையும் தன் மாமனார் வீட்டில் பார்த்த முகுந்தன், முகம் சுருக்கினான். அவர்கள் இருவரும் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...