47 சென்னையில்...
தான் காண்பது கனவில்லை என்பதை நம்பவே முடியவில்லை ஜானகியால். அவரது மகன், அவரது மருமகளுடன் அவர் கண் முன்னால் நின்று கொண்டிருந்த போதும், அவரால் நம்ப முடியவில்லை. போதாது என்று, அவன் மீராவின் தோள்களை உரிமையோடு சுற்றி வளைத்துக் கொண்டு வேறு நின்றிருந்தான். மீராவுடன் அவரை கடந்து, வீட்டிற்குள் நுழைந்தான் முகுந்தன்.
மாடியிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த அவனது அப்பா கேசவன், அவர்களை பார்த்ததும், தூக்கிய ஒற்றை காலை கீழே வைக்காமல் அப்படியே நின்றார்.
"டேய் முகுந்தா..." என்று தன்னை மறந்து கத்தினார்.
தனது பையை கீழே வைத்துவிட்டு,
"ஹாய் பா" என்றான்.
ஒருவேளை தான் கண்டு கொண்டிருப்பது கனவாக இருந்தால், அந்த கனவின் தூக்கத்திலிருந்து தான் எழுந்து விடும் முன், தன் மகனை நெருங்கி விட வேண்டும் என்ற வேகத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தார் கேசவன். அவன் அருகில் வந்ததும், உணர்ச்சி பெருக்குடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
"முகுந்தா..." என்ற ஒற்றை வார்த்தையை தவிர வேறு எதுவும் அவர் வாயை விட்டு வெளியேறவில்லை
"எப்படி இருக்கீங்க பா?" என்றான் முகுந்தன் புன்னகையுடன்.
அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் தலையை மட்டும் ஆட்டினார் கேசவன்.
"ஜானு..." என்றார் அவர் தன்னை மறந்து.
தன் மகனையும் மருமகளையும் பார்த்துக்கொண்டு சிலை போல் நின்றிருந்த ஜானகி, அவர்களை நோக்கி வந்தார். அவரை பார்த்து புன்னகைத்தான் முகுந்தன். தன் கையை விரித்த அவர், முகுந்தனை விட்டுவிட்டு, தன் மருமகளை அணைத்துக் கொண்ட அவரை கண்களை சுருக்கி பார்த்தான் முகுந்தன்.
"தேங்க்யூ சோ மச், மீரா" என்று முகுந்தனை பார்த்த அவர்,
"உன்னோட மாற்றத்துக்கு இவ காரணம் இல்லன்னு சொல்லுவியா நீ?" என்றார்
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...