25 திருமணமானவள்

835 68 10
                                    

25 திருமணமானவள்

ஜெகதீஷும், நந்தகோபாலும் தன்னை காதலிக்கிறார்கள் என்று தெரிந்த மீரா அதிர்ச்சிக்கு ஆளானாள். அவர்கள் யாருக்கும் இது நல்லதல்ல. அவர்களை உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டும். அப்போது, நந்தகோபால் ஜெகதீஷின் அறைக்கு செல்வதை அவள் கண்டாள். அது அவளுக்கு ஆச்சரியம் அளித்தது. அவர்கள் இருவரும் அவளை காதலிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. அது எவ்வளவு உயர்ந்த குணம். தன்னால் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணினாள் அவள். ஜெகதீஷின் அறையை நோக்கி நடந்தாள். அவர்கள் அவளைப் பார்த்து இதமாய் புன்னகைத்தார்கள்.

"நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்"

"மீரா, தயவு செய்து யோசிக்காம, எதுவும் சொல்லிடாதீங்க" என்ற ஜெகதீஷை அதிர்ச்சியுடன் பார்த்தான் நந்தகோபால். அப்படி என்றால், மீராவை காதலிக்கும் விஷயத்தை ஜெகதீஷ் அவளிடம் கூறி விட்டானா?

"இதுல யோசிக்க எதுவும் இல்லை ஜகா. ஏன்னா, நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ" என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் குட்டை உடைத்தாள் மீரா.

"என்ன்னனது?" இருவரும் அதிர்ந்தார்கள்.

"ஆமாம்"

"நீங்க பொய் சொல்றீங்க" என்றான் ஜெகதீஷ், இல்லை என்றபடி தலையசைத்து.

"எனக்கு சென்னை தான் சொந்த ஊரு. கல்யாணத்துக்கு பிறகு என் புருஷனோட இருக்கணும்னு தான் நான் மும்பைக்கு வந்தேன்"

"நீங்க கல்யாணம் ஆனவங்களா இருந்தா, அதை ஏன் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லல?" என்றான் நந்தகோபால்.

"நான் கல்யாணம் ஆனவன்னு யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு நான் என் புருஷன் கிட்ட சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன்"

"ஆனா ஏன்?" என்றான் ஜெகதீஷ்.

"என்னை மன்னிச்சிடுங்க ஜகா. அதை என்னால சொல்ல முடியாது. ஏன்னா, அது எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற சொந்த விஷயம்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now