7 தேவதை

784 64 6
                                    

7 தேவதை

மறுநாள் காலை

சீக்கிரமே எழுந்த மீரா, சிற்றுண்டியையும் மதிய உணவையும் சமைத்து முடித்தாள். மருத்துவரின் அறிவுரையின்படி, அன்று முகுந்தன் வீட்டில் இருந்து ஓய்வெடுப்பானா  மாட்டானா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அன்று அவன் சமைக்க வேண்டாம் என்று மட்டும் அவள் நினைத்தாள். அவன் தூக்கம் கலைந்து எழுந்தால், சமைக்கத் துவங்கி விடுவான். அவளை அமைக்கவும் அனுமதிக்க மாட்டான். அவன் எழும் முன்பாகவே அந்த வேலையை முடித்து விடுவது என்று அவள் தீர்மானித்தாள். இன்று ஒரு நாளாவது அவன் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று எண்ணினாள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஏழு மணி வரை உறங்கிக் கொண்டிருந்தான் முகுந்தன். அவன் நன்றாக இருக்கிறானா இல்லையா என்று அவள் தெரிந்து கொள்ள விரும்பினாள். மெல்ல அவனிடம் வந்தவள், அவன் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டாள். மெதுவாய் அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தாள். அவனுக்கு காய்ச்சல் இல்லாததால், நிம்மதி அடைந்து, மீண்டும் சமையலறைக்கு சென்றாள். மெல்ல கண் திறந்த முகுந்தன், அவள் சமையல் அறைக்குள் சென்று மறைவதை கண்டான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. சமையலறையில் இருந்த மீரா ஓடிச் சென்று, மேஜிக் ஹோலின் மூலம் வந்திருப்பது யார் என்று தெரிந்து கொண்டு கதவை திறந்து, புன்னகை புரிந்தாள். மருத்துவர் ஸ்ரீகாந்த் உள்ளே நுழைந்தார்.

"குட் மார்னிங் டாக்டர்"

"குட் மார்னிங். உங்க ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு?"

"அவர் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்காரு டாக்டர்"

"நான் ட்யூட்டிக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன். போறதுக்கு முன்னாடி அவர் எப்படி இருக்காருன்னு செக் பண்ணிடலாம்னு வந்தேன்"

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்"

அப்பொழுது முகுந்தன் தூக்கம் கலைந்து எழுவதை அவர்கள் கண்டார்கள்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now