44 பொறாமை
தனது வீடு இருக்கும் பரேலை நோக்கி காரை செலுத்தினான் முகுந்தன்.
"உனக்கு கார் ஓட்ட தெரியுமா?" என்றான் அவன்.
இல்லை என்று தலையசைத்த மீரா,
"கத்துக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா எனக்கு சான்ஸ் கிடைக்கல" என்றாள்.
"கத்து கொடுத்தா கத்துக்குவியா?"
"நிச்சயமா... ஒரு நல்ல டிரைவிங் ஸ்கூல்ல சேர்த்து விடுறீங்களா?" என்று அவனது அனுமதியை கோறினாள் வேண்டுமென்றே.
அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் முகுந்தன்.
"டிரைவிங் ஸ்கூலா?"
ஆமாம் என்று தலையசைத்தாள்.
"நான் உனக்கு சொல்லிக் கொடுக்க மாட்டேனா?" என்றான்.
உள்ளூர சிரித்துக்கொண்ட அவள்,
"சொல்லிக் கொடுப்பீங்களா?" என்றாள்.
இது என்ன கேள்வி? என்பது போல முகத்தை சுருக்கி, அவளை விசித்திரமாய் நோக்கினான் அவன்.
"டிரைவிங் ஸ்கூல் ட்ரெயினருக்கு சிம்பிள் மெத்தட்ஸ் தெரியும். புதுசா கத்துக்குறவங்களுக்கு, அது ஈசியா இருக்கும்"
அவள் உண்மையிலேயே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று முனைப்பு காட்டியது அவனுக்கு அதிர்ச்சியை தந்தது.
"ஆனா முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட கத்துக்க உனக்கு சங்கடமா இருக்கும் இல்ல?"
"நம்ம என்னங்க செய்ய முடியும்? கார் ஓட்டணும்னு நினைக்கிறவங்களுக்கு அது ஒன்னு தானே வழி?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.
"உனக்கு வேணும்னா நான் சொல்லித் தரேன்" என்றான் அவன்.
தன் மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,
"நீங்க ஒரு ட்ரைனர் சொல்லிக் கொடுக்கிற மாதிரி ஈஸியா சொல்லிக் கொடுப்பீங்களா?" என்றாள்.
"நான் இந்த சண்டே உனக்கு சொல்லித் தரேன். உன்னால என்கிட்ட ஈசியா கத்துக்க முடியலன்னு தோணுச்சுன்னா, அதுக்கப்புறம் வேணும்னா டிரைவிங் ஸ்கூலுக்கு போறது பத்தி யோசிக்கலாம். ஆனா நிச்சயமா நான் சொல்லிக் கொடுக்கிறது உனக்கு பிடிக்கும்" என்றான் நம்பிக்கையுடன்.
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...