43 கொண்டாட்டம்
விடி அலுவலகம் பார்ட்டி கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட வேலையை பார்ட்டிக்கு முன்பு முடித்துவிட வேண்டும் என்று மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்தான் முகுந்தன். அப்பொழுது, அவனது அறைக்கு வந்தாள் மீரா. அவளை பார்த்தவுடன், சிரித்தபடி தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து,
"சொல்லுங்க மேடம்" என்றான்.
"வாசு சொன்னாரு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து புது ப்ராஜெக்ட்டுக்காக வேலை செய்ய போறோமாமே"
ஆமாம் என்று தலையசைத்தான்.
"அந்த ப்ராஜெக்ட் பத்தின டீடெயில்ஸ் எனக்கு கொடுங்க" என்றாள்.
"முதல்ல நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு உட்காரு. அதுக்கு அப்புறமா பேசு" என்றான் உதட்டோர சிரிப்புடன்.
அவனுக்கு முன்னால் அமர்ந்த மீரா,
"இப்ப சொல்லுங்க" என்றாள்.
"ப்ராஜக்ட்டை சப்மிட் பண்ண இன்னும் பதினாஞ்சி நாள் இருக்கு. நான் தனியாவே நிறைய ப்ரொஜெக்ட்டை ஒரே வாரத்துல செஞ்சி முடிச்சிருக்கேன்"
"அப்படியா?"
"ஆமாம். அதனால நீ ரிலாக்ஸா இரு. நமக்கு நிறைய டைம் இருக்கு"
"உங்களால அதை தனியாவே செய்ய முடியும்னா, எதுக்காக வாசு நாம் இரண்டு பேரையும் சேர்ந்து அதை செய்ய சொன்னாரு? அதுவும் இவ்வளவு டைம் கொடுத்து...?"
"நம்ம ரெண்டு பேரும் க்ளோசா இருக்கணும்னு அவன் நினைக்கிறான் போல இருக்கு" என்றான் முகுந்தன் புன்னகையுடன்.
"இது ஆஃபீஸா? இல்ல லவ்வர்ஸ் பார்க்கா?" என்றாள் மீரா கலகல சிரிப்புடன்.
"அது நம்மளை பொறுத்த விஷயம்" என்று அவனும் சிரித்தான்.
"சரி, எனக்கு ப்ராஜெக்ட் பத்தி சொல்லுங்க"
"அது வின்டர் கலெக்ஷன் பத்தினது. நம்ம கம்பெனியோட பெஸ்ட் டிசைன்சை கலெக்ட் பண்ணணும். அது கஸ்டமர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரியும் இருக்கணும். அதை ப்ராஜெக்ட்ல ஆட் பண்ணனும்"
YOU ARE READING
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
Romanceதனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடைய...