சுகந்தமாய் சுகம் தந்தாலும் நெருப்பாய் தகிக்க
வைப்பதேனோ உன்
நினைவுகள்
கனவில் உன்னவளாய்
உணர்த்தி நினைவில்
தள்ளி நிறுத்துவதேனோகற்பனையில் உன்னுடன்
குடும்பமாக வாழும் நான்
நினைவில் வேறு துணைக்கு இணையாகும் நிலையேனோஉண்மையுரைத்து உன்
விலகலை ஏற்பதா
பொய்யுரைத்து தோழியென்ற நிலையில் பயணிப்பதாஎந்தன் நிலையுணராத
உன்மேல் காதலும் கசப்பும் சரிவிகிதத்தில் வளர எதை பிரயோகிப்பேன் உன்னில்
என்னை உணர்த்த
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..