எல்லா தந்தைகளும் இப்படித்தானா இல்லை இவன் மட்டும் இப்படியா
அலப்பறைகள் அதிகம் என்றாலும் பொறுத்துக் கொள்வேன் இவர்களின் பாசப் போராட்டத்தை தவிர
வானரப்படைகளும் தோற்கும் என் செல்லங்களின் ஞாயிற்றுக்கிழமை அலப்பறைகளில்
மகள் வரும் வரை என்னைச் சுற்றி சுற்றி இம்சைகள் செய்தான்
வந்தபின்பு அவன் கண்களுக்கு என்னைத் தவிர எல்லாம் தெரிகிறதுஇழுத்து அறையலாம் என்றாலோ அவன் என்னை விட பைத்தியம் திருப்பி அறைந்து விடுவான்
இரண்டு நாள் சமைக்காமல் இருந்து கூட பார்த்தேன் தப்பித்தோம் என்று வெளியில் வாங்கி உண்டதுகள் என்னை வெறுப்பேற்றி
பல நாள் அவர்களின் விளையாட்டுப் பொருட்களில் நானும் அடக்கம்
மாமியாரின் மகிமை உணர்ந்த தருணங்கள் அவைஇவர்களின் மகிழ்ச்சியில் உலகை வென்ற சுகம் கிட்டினாலும் சிறு பொறாமையும் உதிக்கிறது
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..