எங்கே இருக்கிறாய்
உனக்காக காத்திருக்கும் என் துயர் அறிவாயாஉன் அருகாமையின் தேவையை ஒவ்வோர் வினாடியிலும் உணர்கிறேன்
உன்னால் மட்டுமே என் தனிமைத் துயர் தீரும் என்பதை அறிந்து கொண்டு உனக்காக தவமிருக்கிறேன்
கடந்த காலம் போல் ஏங்க விடாது என்னிடம் வா யார் அன்பிற்காகவும் இனியும் ஏங்க விடாதே
ஏமாற்றம் அதிகமாய் வலி நிறைந்ததாய்
என் மனது தாங்கும் சக்தி இழந்து காலம் கடந்தாகி விட்டதுயாரிடமும் என்னால் உன்னிடம் போல் இருக்க இயலாது
நீயே எல்லாம் என்னும் நிலை அறிந்து கொண்டேன்என்னை மன்னித்து என்னிடம் வா
இனி உனக்காக மட்டுமே நான்
நாம் நமக்காகஉன்னை என்னை அன்றி யாருமில்லை நம் உலகில்
உந்தன் பெயர் அறியேன்
கற்பனையில் கூட உந்தன் உருவம் கண்டதில்லை
இருப்பினும் நீ மட்டுமே என்பதை உணர்ந்தேன்காலத்தை ஏமாற்றி என்னைத் தேடி வா
உனக்காக இங்கே நான்
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..