எத்தனை உயிர்கள் உன்னை நேசித்தாலும்
உன்னை வெறுக்கும்
ஒற்றை உயிர் நான்சிந்தை முழுதும் நீயாகிட சித்தம் கலங்கிட உன்னை வெறுக்கின்ற
நான்காணும் யாவிலும் நின்னை உணரச்செய்த உன்னை
வெறுக்கும் நான்அன்பும் அக்கறையும்
உன்னில் கொண்ட என்னை விலகிய உன்னில் வெறுப்பாய் நான்நீயின்றி நானறியேன் என்றுணர்ந்தும் இடையில் விட்டுப்பிரிந்து வேறு
உலகுக்குச் சென்ற
உன் அன்பை வெறுக்கின்ற நான்எவ்வுலகாயினும் ஒன்றாய் வாழ்வோம்
என்றுரைத்து இடையில் பிரிந்த உன்னில் வெறுப்பின் பிடியில் நான்நம் வாழ்வின் எல்லைக் கண்டபின் கைக்கோர்த்து ஒன்றாய் காண வேண்டிய உலகை இடையில் கையுதறி காணச்சென்ற நின் நினைவுகளில் வெறுப்புப் படிந்த நான்
சுற்றத்தார் சுற்றியிருக்க
என் சுற்றம் நீயற்றுப்போகிட நிந்தன் பிரிவில் தனிமை உலகை உணர்த்திய உந்தன் மீது நெருப்பாய் வெறுப்பில் நான்
![](https://img.wattpad.com/cover/138896410-288-k600312.jpg)
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..