தரையில் கிடந்தவன் சற்றே கஷ்டப்பட்டு முனகலுடன் எழுந்தமர்ந்தான்.
"இல்ல சார்.. என்னை எங்கயும் வரசொல்லல அவனுக. பத்திரத்தை வாங்கிட்டு, அதை நானே என் பேருக்கு மாத்தி எழுதிக்க சொன்னானுக. ஏன்னு கேட்டதுக்கு, தேவைப்படும்போது வாங்கிக்கறேன்னு சொன்னாங்க." என்றான்.
அழகேசன் தலையசைத்துவிட்டு திவாகரைப் பார்க்க, திவாகரும் புரிந்து சம்மதித்தான்.
"திவாகர், நீங்க ஒண்ணும் குழப்பிக்காதீங்க. இதை நான் ஸ்மூத்தா டீல் பண்ணறேன். மலையப்பனை எப்படி சிக்க வைக்கணும்னு தெரியும் எனக்கு. இப்ப நீங்க வானதியை போயி பாருங்க. எனக்குத் தெரிஞ்சு, நீங்க பயப்படவேண்டியது அவங்களை நினைச்சுதான்!"
அவன் தலையசைத்துவிட்டு பதற்றச் சிரிப்புடன் வெளியேற, அழகேசன் அடியாட்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றத் தொடங்கினார்.
______________________________________
"திவா!! உனக்கு ஒண்ணும் ஆகலையே?? என்ன நடந்துச்சு? எல்லாம் ஓகே தான?"
பயங்கரமாய்த் திட்டுவாள் என்று எதிர்பார்த்துத் தயங்கித் தயங்கி வீட்டுக்குள் நுழைந்தவன், அவளது பதற்றத்தைக் கண்டு அதிசயித்தான். சரிதான், பயத்தைக் கரிசனம் புறந்தள்ளி விட்டதென நினைத்துக்கொண்டு, அவளைக் கட்டியணைத்து ஆறுதல்படுத்தினான்.
"ஆளுங்களை மலையப்பன் தான் அனுப்பிருக்கான். ஸோ, இவனுகள வச்சு அவனைத்தான் பிடிக்க முடியும், ஆதிகேசவனை இல்ல. அதுக்கு இன்ஸ்பெக்டர் சார் வேற ஏதோ ப்ளான் போடறேன்னு சொன்னாரு. ஆனா, நாம அதுக்குள்ள, ஆதிகேசவனுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஒரு ஸ்ட்ராங்கான லிங்க்கை கண்டுபிடிச்சு வெளிப்படுத்தணும். நிலத்துக்காகத் தான் இந்தக் கொலைகள்னா, அப்படி அந்த நிலம் அவனுக்கு எதுக்காகத் தேவைப்படுது? பினாமி பேரில வேம்பத்தூர் நிலங்களை சேர்க்கறது எதுக்காக?"
"கண்டுபிடிக்கலாம். அந்த அக்ரி வாத்தியார் குடுத்தாரே ஒரு பொண்ணோட ஃபோன் நம்பர்.. அந்தப் பொண்ணு இன்னிக்கு ஊர்ல இருந்து வந்துடுச்சு. காலேஜ்ல இருக்கா. இப்ப போனா அவகிட்ட பேசலாம்."
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...