41

1.6K 88 19
                                    

"என்ன சொல்றீங்க??"

"சார்.. இது ஒரு நிலக்கடலை விதையோட நேச்சரல் காம்போசிஷன் இல்லையே.. ஒருவேளை ஒட்டுரக விதைகளையே தவறுதலா குடுத்துட்டாரா? இல்லையே.. அப்பவும், இது enhanced varietyஆ இருக்கமுடியாது... இங்க பாருங்க.. நிலக்கடலையில, பொட்டாசியம் சத்துதான் எப்பவும் அதிகமா இருக்கும். பொட்டாசியம் இருக்கற மண்ணுல அது நல்லா வளரும். இந்த விதைகள்ல, செலிரியமும், பாஸ்பரஸும்தான் அதிக அளவில இருக்கு. இந்தமாதிரி விதைகள் உடம்புக்கு மட்டுமில்லாம, அது விதைக்கப்படற மண்ணுக்கும் தீங்கு. மண் மலடாகறதுக்குக்கூட வாய்ப்பு இருக்கு. இதை க்ரீன் கில்லர்னு சொல்வாங்க. இதுல ஏதோ தப்பு இருக்கு."

அழகேசன் குழப்பமாக வானதியைப் பார்க்க, அவளும் புரியாமல் தலையசைத்தாள்.

"நான் கம்ப்யூட்டர் சயின்ஸ். அண்ணன்தான் அக்ரி. எனக்கு இதைப்பத்தி நுணுக்கமா எதுவும் தெரியாது. மேலோட்டமா அண்ணனும் அப்பாவும் பேசிக்கறதை வச்சு மட்டும்தான் எனக்கு இதையெல்லாம் தெரியும்."

திவாகர் உறுதியாக அதில் ஏதோ தவறு இருப்பதாகச் சொன்னான். சந்தேகம் இருப்பதால், இதுபற்றித் தெரிந்த யாரிடமேனும் கேட்கலாமென முடிவெடுத்து, மூவரும் கிளம்பி அரசு வேளாண் கல்லூரிக்கு விரைந்தனர்.

கல்லூரி விடுமுறை என்பதால், ஒரு பேராசிரியர் மட்டும் அங்கே இருந்தார். இவர்களின் கோப்புகளைப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினார்.

"நான் அக்ரி படிச்சு முப்பது வருஷமாகுது. நாளுக்குநாள் இதுல புதுப்புது முன்னேற்றங்கள் வந்துட்டு இருக்கறதால, எல்லாத்தையும் அப்டேட் பண்ணிக்க முடியாது எங்களால. எங்க ஸ்டூடண்ட்ஸ் நிறையப் பேரு 'seed enhancement' ஆராய்ச்சிகள் பண்ணிட்டு இருக்காங்க. நான் ஒரு பொண்ணோட நம்பர் தர்றேன்.. அவகிட்ட இதைக் கேளுங்க."

அவர் தந்த எண்ணை வாங்கிக்கொண்டு, நன்றி கூறிவிட்டுக் கிளம்பினர் மூவரும். அந்த எண்ணிற்கு அழைத்தபோது, வெளியூரில் இருப்பதாகவும் இரண்டு நாட்களில் திரும்பி வந்தபின்னர் சந்திக்கலாமென்றும் பதில் கிடைத்தது. மனதில் பல குழப்பங்களோடு வீடு திரும்பினர் வானதியும் திவாகரும்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now