9

906 95 39
                                    

சிவகங்கை அரசு மருத்துமனை.

நேற்றிரவு வந்தபோது இருந்த பதற்றமும் பயமும் இப்போது அற்றுப்போய், விடையறிய வேண்டிய கேள்விகளுடன் உள்ளே விரைந்தாள் வானதி.

திவாகருக்கு அங்கே நிற்கவே என்னவோபோல் இருந்தது. மருந்துநெடியைக் காட்டிலும் அதிகமாக அடித்த குப்பை நாற்றமும், குழந்தைகளின் வீறிட்ட அழுகை சத்தங்களும், அழுக்குப்படிந்த சுவர்களும், அசூசையான மனிதர்களுமாய்.... அவனது தாங்கும்சக்திக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது அவ்விடம்.

பள்ளிக்கூடத்தைக் கண்டு சிணுங்கும் குழந்தைபோல, மனமே இல்லாமல் அவள்பின்னால் ஒவ்வொரு எட்டாக வைத்து நடந்துபோனான் அவன். தப்பித்தவறியும் யார்மீதும், எதன்மீதும் உரசியோ, மிதித்தோ விடாமல், உச்சகட்ட கவனத்துடன் சென்றுகொண்டிருந்தான்.

முதன்மைக் கட்டிடத்தைத் தாண்டி, பிணவறைக் கூடத்துக்கு வந்தபோது, குடலைப் பிடுங்கும் ஃபார்மலின் நாற்றம் அவனைக் குமட்டச்செய்ய, அதற்குமேல் செல்ல விருப்பமின்றி, மரத்தோரம் நின்றுவிட்டான் அவன். ஒருமுறை அவனைத் திரும்பிப்பார்த்துவிட்டு, அவள் உள்ளே சென்றாள்.

முன்னறையில் அமர்ந்திருந்த பணியாளரிடம் விவரம் சொன்னபோது, சில கோப்புகளை நீட்டி அதில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, இறப்புச் சான்றிதழ்களைக் கையில் தந்தார் அவர்.

"சர்டிபிகேட்ஸ் மட்டும்தானா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே சார்?"

அந்த ஆள் சிரித்தார்.

"ரிப்போர்ட் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல குடுத்தாச்சு. உங்க நிலமை தெரிஞ்சுதான், அலைய விடாம நானே VAO கையெழுத்தெல்லாம் வாங்கி சர்டிபிகேட் அடிச்சுக் குடுத்தேன். அதுக்கு நன்றி சொல்லாம.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கேக்கறீங்க..!"

அவள் சிரிக்கவில்லை.

"சந்தேகத்துக்கிடமா நடந்த மரணங்கள்ல, சம்பந்தப்பட்ட நபரோட குடும்பத்தினர் கிட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைக் காட்டணும். அவங்க ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பிறகுதான் நீங்க டெத் சர்ட்டிபிகேட் அடிக்கணும்"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now