32

1K 80 48
                                    

"மத்தாப்பூ.." என்ற அவனது அழைப்பு வானதியின் இதயத்தை ஒருகணம் நின்று துடிக்கச் செய்தது.

திவாகரின் கைகளை சட்டென விலக்கிவிட்டு அவன் முகத்துக்கு நேரே மண்டியிட்டு அமர்ந்தாள் அவள். அவன் கண்ணில் இத்தனை ஆண்டுகளாகச் சேர்த்த ஏக்கமும் கலக்கமும் போட்டிபோட, அவளும் ஏதோ புரிந்து கண்ணீர்மல்க அவன் முகத்தைக் கைகளில் ஏந்திக்கொண்டாள்.

அவன் வாய்விட்டு அழுதான்.

"என் மத்தாப்பூ... உன்னப்போய் மறந்துபோயிட்டேனேடி... என் உசுரே நீதானடி..."

தேற்றுவாரின்றி இரண்டு மனங்களுமே கண்ணீரில் கரையத் தொடங்கின...

வேம்பத்தூரில் இருந்தவரை, வானதியையும் திவாகரையும் தனித்துப் பார்க்க எவராலுமே முடியாது. வானதி எங்கிருக்கிறாளோ, அங்குதான் இருப்பான் திவாகர். சுதாகரைவிட, திவாகர் மீதுதான் வானதிக்கும் வசந்திக்குமே பிரியம் அதிகம். 'அத்தை, அத்தை' என்று அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிலேயே வானதியுடனே பழியாய் கிடப்பான் அவனும்.

இவனுக்கு ஐந்துவயது ஆனபோது பள்ளியில் சேர்க்கையில், வானதி இல்லாமல் எங்கும் போகமாட்டேன் என்று அழுதுபுரண்டு அடம்பிடிக்க, சரியென ஓராண்டு தள்ளிப்போட்டு, ஆறுவயது ஆனபோதே இருவரையும் ஒன்றாகப் பள்ளிக்கு அனுப்பினர். அந்த அளவிற்கு வானதி என்றால் உயிர். இருவரும் சேர்ந்து நடக்காத வரப்பில்லை, ஏறாத குன்றுகளில்லை, போகாத கண்மாய்கள் இல்லை, ஆடாத ராட்டினங்கள் இல்லை. சுருக்கமாக, வானதி இல்லையென்றால் திவாகர் இல்லை.

ஆனால் அதற்கெல்லாம் இடியாக, திடீரென ஒருநாள் பள்ளி விட்டு வந்தபோது அவசர அவசரமாய் யாரிடமும் கூறிக்கொள்ளாமல் இவர்களது குடும்பம் ஊரைவிட்டுக் கிளம்ப, உடைந்தது அவர்களின் உறவு மட்டுமின்றி, திவாகரின் குழந்தை நெஞ்சமும்தான்.

சிவகங்கைக்கு வந்தபோதிலிருந்தே வானதியைக் கேட்டு நிறுத்தாமல் அழத்தொடங்க, காய்ச்சலாகி, மருத்துவரிடம் காட்டி, தூக்க மாத்திரைகள் தந்து தூங்கவைத்தனர் அவனை. எதுவும் பேசுவதற்கோ கேட்பதற்கோ இயலாமல் வேதாசலம் உடனடியாக சுதாகரையும் அவனையும் கேரளாவில் படிக்க அனுப்பிவைக்க, அங்கும் அவளது நினைவுடனே உண்ணாமல் உறங்காமல் தவித்து இளைத்துப்போனான் அவன். எவரிடமும் சரியாகப் பேசாமல் தனித்தே இருக்க விரும்பினான்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now