21

926 87 42
                                    

ஆதிகேசவன் சிவகங்கை எனத் தேடியபோது ஏன் சிக்கவில்லை எனப் புரிந்தது இருவருக்கும். மதுரை சிம்மக்கல் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என ஹரிணியின் மூலம் தெரிந்தது.

வானதி ஹரிணியைப் பார்த்து, "உங்க ஸ்கூலுக்கு வந்தாரா? அதுனாலதான் உனக்குத் தெரியுமா?" எனத் துருவினாள்.

"ம்ம். எங்க ஸ்கூல் மதுரையில் இருக்க குறிஞ்சி ஸ்கூலோட ப்ரான்ஞ்ச் தான? அதுதான், மதுரைல இருந்து சீஃப் கெஸ்ட்டா வந்தார் அவரு."

அவள் திவாகரை அர்த்தமாகப் பார்த்தாள், பின் ஹரிணியிடம் திரும்பி, "நீ செஞ்ச ஹெல்ப்புக்கு தேங்க்ஸ். ஆனா, இதைப்பத்தி நீ எதுவும் யோசிக்காத. நாங்க ஒரு முக்கியமான விஷயமா இதை செஞ்சுட்டு இருக்கோம். நீ இதுல சம்பந்தப்படவேண்டாம். உன் நல்லதுக்கு தான் சொல்றோம். என்னை நம்பு" என்று பலவாறாக சமாதானம் செய்து அவளை அனுப்பிவைத்தாள்.

பின் திவாகருடன் அமர்ந்து, ஆதிகேசவனுக்கும் தன் குடும்பத்திற்கும் என்ன தொடர்பெனக் கண்டறிய முயன்றாள் அவள்.

"எட்டு வருஷம் முன்ன பதவியில இருந்திருக்கார். அதாவது ரெண்டு tenure முன்னாடி. அதுக்கப்பறம் நின்னப்போ ஜெயிக்கல. அவங்க கட்சியோட இன்னும் தொடர்புல தான் இருக்கார். மதுரையில ஒரு க்ரானைட் குவாரி வச்சு நடத்திட்டு இருக்கார். சிவகங்கைக்கும் அந்த ஆளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எங்க குடும்பத்துக்குமே அந்த ஆள்கூட எந்தத் தொடர்பும் இல்லை. பின்ன எந்த வகையில இந்த ஆள் எங்க குடும்பத்தோட மரணத்துக்கு காரணம்? இதை இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லணுமா?"

திவாகரும் யோசனையுடன் தலையசைத்தான்.

"அவர்னால இன்னும் டீப்பா விசாரிக்கமுடியும். அவர்கிட்ட இதை சொல்றதுதான் பெஸ்ட்."

இருவரும் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்றனர். அதிகநேரம் காக்கவைக்காமல் அழகேசன் சீக்கிரமே அவர்களை அழைத்தார்.

"வாங்க மிஸ் வானதி. நானே உங்களை கூப்பிடணும்னு நினைச்சேன்."

"ஏன் சார்? என்னாச்சு?"

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now