48

1K 76 33
                                    

*****************

கிட்டதட்ட ஒரு மாதம் கழிந்திருந்தது.

சுதாகரும் பானுவும் நாளை ஊருக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. வானதி வழக்கம்போல் அமைதியாக மீனாட்சிக்கு உதவியாக சமையலறையில் ஏதோ செய்துகொண்டிருந்தாள். பானுவும் ஹரிணியும் சண்டை சச்சரவுகளுக்கு நடுவே அவளது உடமைகளை பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தனர்.

"நாளைக்கு காலைல ப்ளைட்டு... இப்பப் போயி இப்படி சண்டை கட்டிக்கறீங்க??" எனப் பொறுமையின்றிக் கேட்டுக் கொண்டிருந்தான் சுதாகர்.

"நான் இல்லைங்க.. இவதான்.." என்றாள் பானு, குரலெழுப்பாமல்.

"ஆமா.. அங்கயும் போயி அண்ணி சேலைதான் கட்டுவேன்னு அடம்புடிக்கறாங்க.. வேற ட்ரெஸ்ஸெல்லாம் எடுத்தே வைக்க மாட்டேங்கறாங்க!! புதுசா அவங்களுக்காக வாங்கின குர்த்தி எல்லாம் வேஸ்ட்டா அப்ப? அதான் கேட்டேன்.." என்றாள் ஹரிணி அங்கலாய்ப்பாக. சுதாகர் நம்பமாட்டாமல் தலையை அசைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

அனைவரும் உற்சாகத்தில், பரபரப்பில் இருக்க, வானதி அமைதியாக சமையலறையில் இருப்பதை சோகமாகப் பார்த்தான் திவாகர். ஒரு மாதமாகவே அவள் அப்படியேதான் இருந்தாள். உத்வேகங்கள் எல்லாம் தீர்ந்துபோய் சாந்தமாக, அமைதியாக. மையமாகச் சிரிப்பாள். இரண்டொரு வார்த்தைகள் பேசுவாள். அறைக்கு வந்தால், படுத்ததும் உறங்கிவிடுவாள். பார்வைப் பறிமாற்றங்கள் கூடக் குறைந்திருந்தன. அன்று அவன் அத்தனை முக்கியமான விஷயத்தை அவளிடம் பேசியபோதுகூட, சின்னத் தலையசைப்பு மட்டுமே. அவனுக்கே சந்தேகமாக இருந்தது, அது வானதிக்கு சம்மதம்தானா என்று. ஆனால், அவள் மனதை அறிந்தவனால், அவளது தேவைகளையும் உணரமுடிந்தது. தான் எடுத்த முடிவுதான் சரியானதெனத் தோன்றியது.

"வானதியம்மாவுக்கு லெட்டர் வந்துருக்குங்க ஐயா..."
வேலைக்காரப் பொன்னையா வந்து ஒரு கடிதத்தை நீட்ட, யோசனையில் ஆழ்ந்திருந்த திவாகர் தன்னிலை திரும்பி அதை வாங்கிக்கொண்டு தலையசைத்தான். உறையில் இட்டிருந்த முத்திரையைப் பார்த்ததுமே முகம் ஒருகணம் பிரகாசமானது அவனுக்கு. சட்டெனச் சென்று அறைக்குள் அதை மறைத்துவிட்டு வந்தான் அவன்.

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now