10

948 88 39
                                    

"கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ல இருந்து கவுந்து, பள்ளத்தில விழுந்திருந்தது. பக்கத்துல சுத்திலும் யாருமே இல்ல; வீடு, கடைன்னு ஒண்ணும் கிடையாது. ஒன்றரைக் கிலோமீட்டர் தள்ளியிருந்த சர்ச்ல, பிரார்த்தனை கூட்டம் முடிச்சு திரும்பப் போனவிக யாரோதான் பாத்து ஆம்புலன்சை கூப்பிட்டிருக்காக. நாங்க போயிப் பாத்தப்போ மூணு பேருமே உயிரோட இல்லை. வேற எந்த வண்டியும் பக்கத்துல இல்ல.

ஹைவேஸ்ல கார் ஆக்ஸிடெண்ட் எல்லாம் அடிக்கடி நடக்கறது தான்மா. இந்த மாசத்துக்கு இது முப்பத்தி மூணாவது கேசு. ஆக்ஸிடெண்ட்னு நேத்தே கேசை மூடியாச்சு. செக்சன் 304. அப்டின்னா சாலை விபத்தில் மரணம்னு அர்த்தம். அரசு தர்ற நிவாரண நிதி மூணு லட்சம் கிடைக்கும். காருக்கும் மனுசங்களுக்கும் இன்சூரன்ஸ் இருந்தா, அதுவும் கிடைக்கும். எல்லாத்தையும் கணக்கில வச்சு தான் டெத் சர்ட்டிபிகேட் அடிச்சுக் குடுத்தோம்.

நீங்க கஷ்டப்படக் கூடாதுன்னு கவனமா செஞ்சு தந்தா, வேதாசலம் ஐயாவைக் கூட்டிட்டு பஞ்சாயத்துக்கு வந்திருக்கீங்களே?"

விபத்து நடந்த பகுதியின் கட்டுப்பாட்டுக் காவல் கோட்டமான பனையூர் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தனர் வேதாசலம், வானதி மற்றும் திவாகர். வானதி கேட்டதற்காக மட்டுமே உடன்வந்த வேதாசலம், சார்-ஆய்வாளர் பேசியதைக் கேட்டதும் கேள்வியாக வானதியிடம் திரும்பினார்.

அவள் நிதானமாக, "இது ஏன் ஹிட் அண்ட் ரன் கேசா இருக்கக்கூடாது சார்?" என வினவ, ஏதோ நகைச்சுவையைக் கேட்டதுபோல் சிரித்தார் அந்தக் காவலர்.

"நெறய சினிமாப்படம் பாப்பீகளோ? Hit and runன்னா என்னன்னு தெரியுமாம்மா? இடிச்சிட்டு, நிக்காமப் போறது. இந்தக்காரை இடிச்ச எந்தக் காரா இருந்தாலும், அதேயளவு அடிவாங்கியிருக்கும். அதுக்குமேல ஓடியிருக்காது.

என்னதான் கவனமா காரோட்டுனாலும், இந்தமாதிரி விபத்துகள் நடக்கத்தான் செய்யுது. எல்லாரும் எல்லா சமயத்துலயும் சரியா இருக்கமுடியாதுல்ல?
எனக்குப் புரியுது சார், அய்யனை, ஆத்தாளை இழந்ததுல புள்ளை கஷ்டப்பட்டு போயிருக்கு... நீங்கதான் பாத்துக்கணும்ங்க ஐயா. பொண்ணு அழுகறான்னு கேசை மாத்த முடியுமா?"

நீயன்றி வேறில்லை.Onde histórias criam vida. Descubra agora