7

966 87 25
                                    

வானதிக்கு முத்துப்பட்டி வந்து மீனாட்சியைப் பார்த்தவுடனே பசுமரத்தாணிபோல நெஞ்சில் பதிந்திருந்த நினைவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடத்தொடங்கின. அனைத்துக்கும் சேர்த்து அவர் தோளில் முகம்புதைத்து அழுதுதீர்த்தாள் அவள்.

தனக்குத் தாலிகட்டியவனோ எதையும் கண்டுகொள்ளாமல் தன்பாட்டில் நின்றிருக்க, அவனது இருப்பை அவனது பெருமூச்சு சத்தம் மட்டும் உணர்த்த, அவன்மேல் கோபமும் வருத்தமும் மேலோங்கியது அவளுக்கு.

ஒருவார்த்தை பேசாமல் வேகமாகச் சென்று கதவடைத்துக்கொண்டவனை ஏதும் சொல்லாமல், இவளை பானுமதியுடன் மீனாட்சி அனுப்பிவைக்க, கசந்த பார்வையுடனே உள்ளே வந்தாள் அவள்.

பானுமதியின் அன்பான பேச்சும் கனிவான முகமும் ஆறுதலாக இருந்தது அவளுக்கு. தன் கண்ணீர் தன்னால் நின்றுவிட, நடப்பதையெல்லாம் சற்று நிதானமாக சிந்திக்கமுடிந்தது அவளால்.

எனக்கு மணமாகிவிட்டது. அதுவும் திவாகருடன். எந்த திவாகரை இருபது வருடங்களாகப் பார்க்காமல் தவித்திருந்தேனோ, யாரை நினைக்காமல் ஒருநாளும் கழிந்ததில்லையோ, அதே திவாகர்.

என் வாழ்வை நான் தீர்மானித்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. யார்யாரோ என் வாழ்க்கையில் முடிவெடுக்க வருகின்றனர். என்னால் எதுவும் செய்யமுடிவதில்லை.
உலகில் இப்போது என்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை. அன்பும் பாசமும் காட்டக் குடும்பம் இல்லை. கட்டிய கணவனுக்கு என்னிடம் ஒட்டுறவில்லை. இந்திய வாழ்வில் பற்றுதலும் இல்லை.

விதியை நினைத்து மீண்டும் கசப்பாகப் புன்னகைத்தாள் வானதி.

பானுமதி அவளுக்குத் தேவையானவற்றை எடுத்துத் தந்தாள்; தன்னை அக்காவென்று அழைக்குமாறும் கூறினாள்.

சுதாகரின் மனைவி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், திவாகரின் அண்ணி என்று கூறியதைக் கேட்டு லேசாகப் புன்னகைத்தாள் வானதி.

'சுதாகரை எனக்குத் தெரியாது என்று நினைத்தாளா? என்னைத்தான் இவர்கள் யாருக்கும் தெரியாது என்று எப்போது புரியும் இவர்களுக்கு? சுதாகரை இவள் எப்போது மணந்தாள்? ஏன் சுதாகருடன் இல்லாமல் இங்கே இருக்கிறாள்? சுதாகருக்கேனும் என்னை நினைவிருக்குமா?'

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now