12

951 86 54
                                    


கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைத் தேற்றும் வழியறியாமல் கையறுநிலையில் நின்றிருந்தான் திவாகர். மூச்சிழுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவளது தோளைத் தொட்டான்.

"வானதி... இப்போதைக்கு உடனடியா எந்த முடிவுக்கும் வர வேணாம். ஏற்கனவே காலைல இருந்து ரொம்பவே அலைச்சல்.. நீயும் பயங்கரமா டையர்டா இருக்க.
எனக்கு க்ரைம் சால்விங் பத்தியெல்லாம் பெருசாத் தெரியாதுதான். ஆனா, சோர்வா இருக்கும்போது மூளை வேலை செய்யாதுன்னு மட்டும் தெரியும். And trust me, i studied it. இங்க இருக்க பேப்பர்ஸ், ஃபைல்ஸ், எல்லாத்தையும் எடுத்துக்க. வீட்டுக்குப் போயி, நிதானமா தேடலாம்.."

இம்முறை அவனது அறிவுரை அவளுக்கு சரியாகப் பட்டது. தலையசைத்துவிட்டு, கண்களைத் துடைத்தபடி எழுந்து முக்கியமான கோப்புகளைத் தன் பையில் எடுத்துக்கொண்டாள் அவள்.
சாமி அறையில் வைத்திருந்த பெற்றோரின் புகைப்படத்தை ஒருமுறை வணங்கிவிட்டு, திவாகருடன் புறப்பட்டாள்.

வீட்டை அடைந்தபோது மாலை நான்காகியிருந்தது. வேதாசலம் முன்னறையில் தனது கணக்குப்பிள்ளையுடன் எதையோ பேசிக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக வருவதைக் கண்டவரின் முகம் ஒருகணம் மலர்ந்தது.

மாமாவிடம் வந்த வானதி, "கேசை மாத்தியாச்சு மாமா... சாதாரண ஆக்சிடெண்ட் கேஸ் இல்ல அது" எனக் கூற, அவரும் சிரிப்பை விடுத்து இறுக்கமானார்.

"என்னம்மா சொல்ற? அதை எப்படி போலீஸ்ல பாக்காம விட்டாங்க?"

"தெரியல மாமா... இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கு. அப்றம், நாளைக்கு... மூணாம் நாள்... கருமாதின்னு.. ஊருல ஏதோ சொன்னாங்க.."

யோசனையாகத் தலையாட்டினார் அவர். தன் வேலையாளிடம், "முத்து... நாளைக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிடு. பெரிய அம்மாவைக் கேட்டு, அவ சொல்றதை செய்" என்றுவிட்டு, மீண்டும் வானதியின் பக்கம் திரும்பினார்.

"காலைல ஆறு மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பிடணும்மா. நாளைக்கு நோன்பு இருக்கவேண்டி வரும்னு நினைக்கறேன். அத்தைகிட்ட கேட்டுக்க.. "

நீயன்றி வேறில்லை.Where stories live. Discover now