வழிநெடுகிலும் மனத்தோடு கிளத்தல் செய்தவாறே வந்துகொண்டிருந்தான் திவாகர்.
தனது புதிய மாற்றங்கள் எதனால் வந்தன? அதன் காரணம் யாது? எப்போதிருந்து இத்தகைய எண்ணம்?
வானதியோ ஆய்வாளரின் அறிவையும் ஈடுபாட்டையும் மனதில் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தாள். இருட்டடித்து மூடிவைக்கப்பட்ட தங்கள் வழக்கு விசாரணைக்கு, ஒரு விடிவெள்ளியாக அவர் வந்ததாகவே கருதினாள் அவள். அவரை நினைத்தபோது அவளறியாமலே முகம்மலர்ந்து புன்னகைத்தாள்.
திவாகருக்கு இவள் முகத்தின் மாற்றங்கள் திரைப்படம் ஓடுவதுபோலத் தெளிவாகப் புரிந்தது. அவன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.
'பாத்து மூணு நாள்தான் ஆச்சு... ஆனா உன்னைப் பார்க்கும் போதெல்லாம் பல வருஷம் பேசிப் பழகின மாதிரி இருக்கு. தினம்தினம் உன்கிட்ட எதையாவது புதுசா பார்த்து அதிசயப்பட்டுப் போறேன்.. இவ்வளவுதான்னு நினைக்கும்போதெல்லாம், அதைவிட புதுசா எதையாவது காட்டி, என்னை ஆச்சரியப்பட வைக்கற நீ.
உன் பேச்சு, திமிரு... எல்லாமே புதுசா இருக்கு... பிடிச்சிருக்கு. யார்கிட்டவும் தானா வலியப் போயி பேசாத என்னையவே நீ பேச வைக்கற, கத்திப்பேசி சண்டைபோட வைக்கற... வீட்டைவிட்டு வாசலுக்குக் கூட வெளியே வராத என்னை, உன்கூட சேர்ந்து வயக்காட்டு வரைக்கும் கூட்டிட்டுப் போற. நம்மைவிட அறிவாளி இந்த ஊருல இல்லைங்கற நினைப்புல இருந்தேன்... நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு அடிக்கடி புரியவைக்கற.
உன்கிட்ட நிறைய கத்துக்கணும்னு தோணுது. உன்கூட நிறைய பேசி, நிறைய கோபப்பட்டு, நிறைய சண்டை போடணும் எல்லாம் ஆசையா இருக்கு. எப்படிடீ என்னை இப்படிப் புரட்டிப் போட்ட நீ? நீ யார் எனக்கு? அதைவிட, நான் யார் உனக்கு?'
இந்தக் கேள்விக்கெல்லாம் விடையளிக்க வேண்டியவளிடம்தானே முன்பு சண்டையிட்டிருந்தான்!
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...