தன்னிடம் ஏதோ சண்டையிட வந்தவள், சட்டென உறைந்து நிற்கவும் திவாகர் பயந்தான். தன்னைத் திட்டவாவது தன்னிடம் பேசினாளே என்று அவன்கொண்ட ஒருகண மகிழ்வு காணமற்போக, வானதியின் நெற்றியில் படர்ந்த சிந்தனைக் கோடுகளைக் கவனிக்காமல், அவசரமாக மன்னிப்பு வேண்டத் தொடங்கினான் அவன்.
"வானி... சாரி, நான் எத--"
"ஷ்ஷ்.. பேசாத!"
"மத்தாப்பூ.. ப்ளீஸ்--"
கைகளால் அவன் வாயைப் பொத்தினாள் அவள். அதை எதிர்பாராதவன் சற்றே வியக்க, அதற்குள் விலகி நின்றவள், "நாம எதோ முக்கியமான விஷயம் ஒண்ணை கவனிக்காம இருக்கோம்! அன்னிக்கு ஏன் நம்மளை அக்ரி ஆபிஸ்ல இருந்து அந்த ஆள் கூட்டிட்டுப்போனான்? ஏன் அந்த ஆபிசரை மீட் பண்ண நம்மளை விடல?" என்றாள்.
அவன் குழப்பமாகப் பார்த்தான்.
"நம்மளை ஃபாலோ பண்ணி வந்திருப்பாங்க, சந்தர்ப்பம் கிடைச்சதும் கூட்டிட்டுப்போனாங்க.. அப்படித்தான?""அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா அது எதேச்சையா நடந்தமாதிரி இப்பத் தோணல. இன்ஸ்பெக்டரை ப்ளான் பண்ணி ஆக்ஸெடெண்ட் பண்ணவங்க, நம்மளையும் நல்லா ப்ளான் பண்ணித்தான் அந்த ஆபிஸ்க்குள்ள போகவிடாம செஞ்சிருக்காங்க. நாமளும் அதை விட்டுட்டு வேற எங்கயோ அலையுறோம்."
"ம்ஹூம்... எனக்குப் புரியல.. அதான் உங்கண்ணன் செல்ஃபோன்லயே அந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ் எல்லாமே இருந்ததுல்ல? மறுபடி ஏன்?"
"அது எனக்கும் தெரியல. ஆனா, கண்டிப்பா அங்க ஏதோ இருக்கு. நாம நாளைக்கே அங்க போகணும்!"
"ப்ச்.. இன்னும் ஒரு வாரத்துக்கு உனக்கு எக்ஸாம் தவிர வேற நெனைப்பு வரக்கூடாது! பரீட்சை எழுதி முடிச்சிட்டு அப்றம் ஜேம்ஸ் பாண்ட் வேலை பாக்கலாம். இப்ப வா, தூங்கலாம்."
உரிமையாகக் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச்சென்றவனை இனம்புரியா உணர்வுடன் பார்த்தாள் அவள்.
'என்னால் எப்படித் தூங்கமுடியும் என்று நினைக்கறாய் நீ, திவா? ஒருபக்கம் வழக்கின் சிக்கல், இன்னொரு பக்கம் நம் உறவென்னும் புதிர். இடையில் குடும்பத்தினர்.. வரவேற்புக்கான ஏற்பாடுகளோடு. இன்று எனக்கு மரணம் கூட வரலாம்.. தூக்கம் வராது. சொன்னால் உனக்குப் புரியுமா?'
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...