திவாகரை அங்கே எதிர்பாராத வானதி அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவனோ கூர்விழிப் பார்வையால் அவள் கண்களையே நேராக நோக்கினான்.
"ஏன்? ஏன் யார்கிட்டவும் சொல்லாம இப்படி ஓடிவந்த? எதுக்காக பத்திரத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு போற?"
அவள் அமைதியாக நின்றாள்.
"கேட்கறேன்ல!??"
சற்றே குரலுயர்த்தி அவன் கேட்க, "உனக்காகத் தான்!!" என அவளும் கத்தி, கண்ணீரில் கரைந்தாள்.
"நான் ஏற்கனவே நிறைய இழந்துட்டேன்.. உன்னையும் என்னால இழக்கமுடியாது திவா..."
அவன் மார்பின்மீது சாய்ந்து அவள் கதற, அவனுக்கும் கண்ணீர் ததும்பியது. அவள் தனக்கு வந்த அழைப்புகளைப் பற்றிச் சொல்ல, திவாகர் முகம் இறுகியது.
அவளை இறுக்க அணைத்துக்கொண்டான் அவன். அவள் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு முத்தமிட்டான்.
"மத்தாப்பூ.. உன்னை விட்டுட்டு எங்கயும் போயிடமாட்டேன் நான்.. இத்தனைதூரம் கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகவும் விடமாட்டேன். உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு வானி... மாமாக்கு, அத்தைக்கு, விக்னேஷுக்கு நியாயம் கிடைக்குறவரை, நாம ஓய்ஞ்சு போயிடக் கூடாது. அவங்க சாவுக்குக் காரணமானவங்களை சும்மாவிடக்கூடாது! உனக்கும் நம்ம முயற்சிமேல நம்பிக்கை இருக்குன்னா, என் பேச்சைக் கேளு"
அவள் இன்னும் விசும்பிக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.
"போதும் திவா... கஷ்டப்பட்டதெல்லாம் போதும். எனக்கு நீ இருக்க, அதுவே போதும் எனக்கு. பகை, பழி, எதுவுமே நமக்கு வேணாம்... நீ இங்க இருக்கவேணாம். நாம அமெரிக்காவுக்கே போயிடலாம். "
"என்ன பேசற நீ? இது பகையோ பழியோ இல்ல வானி.. இது இறந்து போனவங்களுக்கான நீதி. அவங்க மரணத்துக்கான நியாயம். இன்னொரு குடும்பத்துக்கு இப்படி ஒரு அக்கிரமம் நடக்காம இருக்கறதுக்கான காப்பு. எடுத்ததைப் பாதியில விட்டுட்டு வர்றவளா என்னோட மத்தாப்பூ?? ஆயிரம் சிக்கல் வந்தாலும், பின்வாங்காமப் போராடற வானி எங்க? எனக்கு எதுவும் ஆகாது. அப்படியே எதுவும் ஆனாலும்கூட, உன் முயற்சியை நீ கைவிடக்கூடாது. அப்றம் இவ்ளோ தூரம் பட்ட சிரமமெல்லாம் வீணாப்போயிடும். பயப்படாத மத்தாப்பூ. சீக்கரமே இதுக்குக் காரணமானவங்க சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தப்படுவாங்க! அத்தை,மாமா, விக்கியோட ஆத்மாவும் சாந்தியடையும். எல்லாம் சரியாகும்."
![](https://img.wattpad.com/cover/211812310-288-k99704.jpg)
YOU ARE READING
நீயன்றி வேறில்லை.
Mystery / Thrillerஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...