சுற்று 2

159 21 17
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

🛠️சுற்று 2

💞என் அழகிய வசீகரனே💞

வசீகரன்... வைரத்தின் எதிர்த்த வீடான தன் வீட்டுக்குள் நுழைந்தவனை பின் தொடர்ந்த மாயன்......

"என்ன மச்சி....Saree பிஸ்னஸ் பண்ண போறியா என்ன.... 🤔
அப்படி பிஸ்னஸ் பண்றவன், எதுக்காக ஒரு புடவையை மட்டும் கழுத்துல சுத்திகிட்டு இருக்க"

மாயன் கேக்கும் எந்த கேள்விக்கும் வசீகரன் வாயை திறக்காதவன்.. தன் செல் போன் மூலம் வக்கீல் வரதராஜனை அழைக்க...

"என்ன கரன்... வீட்டுக்கு போயிட்டியா..."
என்று வராதராஜன் கேட்ட கேள்விக்கு....

" ம்..."

என்று சொன்னவன்.... தன் வீட்டை சுற்றி நோட்டமிட...

" என்ன கரன் உன் அப்பத்தாவை தேடுறியா.... "

"ம்"

"அவங்க கோவிலுக்கு போயிருப்பாங்க..."

"ஓ "

" சரி.... நீ சாய்ங்காலம் வந்து என்னை பாரு..... ஹாங் அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்.... அந்த வீரய்யன்கிட்ட ஜாக்கிரதையா இரு" என்று வக்கீல் சொல்ல... கோவமான குரலில்...

" அதை நீங்க சொல்ல வேண்டியது
அவன்கிட்ட "

என்று வசீகரன் கைபேசி இணைப்பை துண்டித்தவன்... தன் வீட்டின் ஹாலில் வலது பக்கம் சுவற்றில் மாட்டி இருக்கும் தன் குடும்ப புகைப்படத்தை பார்த்தவன்...பெயரை " கரன்" என்று அழைத்து கொண்டே அவனின் அப்பத்தா உள்ளே நுழைந்தவர்...அவனை கட்டி பிடித்து கண்கள் கலங்கியவாரு அவன் நெற்றியில் முத்தமிட்டவர்..

" என் சிங்கமே.... எப்படி பா இருக்க... உன்னை பார்த்து எத்தனை வருஷமாகிடுது... நான் கண் மூடும் முன் உன்னை ஒரு முறையாவது பாக்கணும்னு எவ்ளோ தவம் கிடந்தேன் தெரியுமா.. "என்று 80 வயது மதிக்க தக்க பாட்டி வசீகரணை கட்டி அணைத்து அன்பு மழை பொழிய....

"போதும்....
நம்ம அழுதது எல்லாம் போதும்...
கண்ணீரால் எந்த இழப்பையும் ஈடு செய்ய முடியாது... நீங்க இனி அழக்கூடாது... சாப்பாடு எடுத்து வையுங்க... நான் குளிச்சிட்டு வரேன்"

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now