🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 1️⃣5️⃣
👉யார் அவள்...??
**************************************
"Sir.... நீங்க சொன்ன அட்ரஸ்ல போய் அந்த சிறுமியை கொடுமை செய்த நபரை அர்ரெஸ்ட் பண்ணலாம்னு பாக்கும் போது.... அந்த வீடே கொழுந்து விட்டு எரிஞ்சிகிட்டு இருக்குதுங்க.... அது மட்டும் இல்லிங்க... உள்ள ஒரு ஆணின் ப்ரெதமும் தீயில் கருகி கிடக்குதுங்க"....
என்று அந்த constable சொல்ல.... வஷி மாயனை பார்க்க.... மாயன் அனகாவை பார்க்க...
"தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடு டி... என் நரம்பெல்லாம் சூடேற கட்டி கொள்ளடி"..
என்ற பாடலை பாடிக்கொண்டே அனகா வசீகரன் அருகில் வந்தவள் மாயனை பார்த்து கண் அடித்தப்படி...."என்ன அண்ணா.. அப்படி பாக்குறீங்க..... உங்க பார்வையை பார்த்தா எங்கேயோ என்னமோ பத்திகிட்டு எரியுது போல"...
என்று அனகா கிண்டலாக வசீகரணை ஏளனம் செய்பளை பார்த்து வசீகரன் முறைக்க ....
வைரம் - என்ன வஷி..... ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க......
வசீகரன் - அந்த சின்ன பெண்ணை காப்பாத்தி நீங்க இங்க அழைச்சிட்டு வரும் போது... அந்த வீட்ல Fire Accident எதாவது நடந்துச்சா
என்று வசீகரன் கேக்க.... வைரம் ஏதும் புரியாமல் அனகாவை பார்க்க....
"What....??Fire accident நடந்து இருக்கா.... ஐயோ....எந்த பத்தினி சாபமோ... அந்த வீடு எரிஞ்சிடுது போல.... சரி போகட்டும்.... இத நினைச்சி கவலை பட... அவன் ஒன்னும் யோக்கியன் இல்லையே"...
என்று அனகா சொல்லும் போது அவளின் விழிகளில் தெரிந்த கோவத்தை வசீகரன் பார்த்தவன் ....