🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 6️⃣0️⃣
**************************************
வைரம் - என்ன வஷி.... என்னாச்சு...
வசிகரன் - இல்ல...அனகா.....
என்று வசீகரன் ஏதோ சொல்ல வருவதற்கு முன்பாக.....
மச்சி... மச்சி சீக்கிரம் வாடா... டேய்.... சீக்கிரம் வான்னு சொல்லுறேன் இல்ல..
என்று கீழ் தளத்தில் இருந்து மாயன் காட்டு கத்தல் கத்த..... வசீகரன் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தவனை பின் தொடர்ந்து வைரமும் மாடியில் இருந்து கீழே எட்டி பார்த்தவன்..
ஏன் டா இப்படி கத்துற....
என்று வசீகரன் கேக்க...மச்சி... இவரு உன்னை பாக்கணுமா..
என்று மாயன் சொன்னதும்....
வசீகரன் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கி வர.... அவனை தொடர்ந்து வைரமும் கீழே வந்தாள்...Yes... Who are you....?
what can i do for you...?
என்று வசீகரன் கேள்வி எழுப்ப..Hi சார் Iam வாணன் ... அமுதவாணன் .. நான் டெல்லில இருந்து வரேன்... உங்கிட்ட தனியா பேசணும்... என்று அந்த ஆசாமி சொல்ல....
புருவம் இடுக்கி அவனை முறைத்த வசீகரன்...
any official மேட்டர்.... என்று கேட்டதும்...ம் ஆமா சார்... உங்ககிட்ட அனகா & AG பற்றி பேச வந்து இருக்கேன்...
என்று அந்த நபர் சொன்னதும்....வைரம் முகம் மாறியவள்...
ஆனந்த் கணேஷ் தான் செத்து போயிட்டாரே... அவரை பற்றி பேச என்ன இருக்கு....அதுவும் இல்லாம உங்கள நான் எங்கேயோ பார்த்து இருக்கேனே..
என்று வைரம் யோசனையோடு பதறிய நிலையில்... அவளை சமாதானம் படுத்தும் விதமாக...அவள் அருகில் வந்து மாதவி...இப்போ ஏன் நீ இவ்ளோ எமோஷனல் ஆகுற..... அவங்க ஏதோ ஆஃபிஸியலா பேச போறாங்க....அவங்க அத பார்த்துப்பாங்க.. நீ போய் உன் வேலையை பாரு...
என்று மாதவி சொன்னவள்..... அவள் அறைக்குள் சென்றிட..என்ன மச்சி.. யாரு இவரு.... AG னா... அனகா brother ஆனந்த கணேஷ் தானே...
என்று மாயன் கேக்க..