🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 1️⃣4️⃣
🤚தீ வினை 🤚
*************************************************
வைரம் சமையல் அறையில் இருக்கும் அரசி டின்னுக்குள் வாயை பொத்தி கொண்டு கண்களில் கண்ணீருடன் பயந்து போய் அமர்ந்து இருந்தவளின் தோளில் பல்லி விழுந்ததை பார்த்து
"அம்மா"என்று அலறியவள் சத்தம் கேட்டு அந்த நபர் கட்டையுடன் உள்ளே நுழைந்தவன் சிரித்து கொண்டே வைரத்தின் அருகில் வந்தவன்,
கழுத்தை பிடித்து அரிசி டிண்ணில் இருந்து அவளை இழுத்து வெளியே கடாசியிவன் வைரத்தின் சேலையை அவள் வசம் இருந்து இழுத்த தருணம்...எங்கிருந்தோ சங்கு சக்கரம் போல சுற்றி கொண்டு வந்த கட்டை அந்த நபரின் கையில் பட்டு அந்த நபர் வைரத்தின் சேலையை சட்டென்று தன் வசம் இருந்து நழுவ விட்டவன் கண் எதிரில் நின்று இருந்தது dr. அனகா....
அந்த நபர் அனகாவை பார்த்ததும் மேலும் மகிழ்ச்சி அடைந்தவன்...
"ஐயோ.... இன்னைக்கு நான் யார் முகத்துல விழிச்சேன்னு தெரியலையே... அல்வா துண்டு போல ஒருத்தியும்... ரசகுல்லா போல இன்னோருத்தியும்ன்னு ரெண்டு அழகிங்க என் கண் முன்னாடி நிக்குறாங்களே"..என்று அந்த நபர் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றவன்.... வைரத்தை விட்டுவிட்டு அனகாவின் அருகில் வந்தவன்...
"ஏய்... நீ என்ன பாக்க வெள்ளைக்காரி போல இருக்கு... எப்பா.... ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்னை போல கட்டழகி கூட வாழ்ந்து செத்து போகணும்"...
என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அந்த நபர் பேசும் வார்த்தையில் உள்ள அசிங்கத்தை கேட்டு வைரம் முகம் சுழித்தவள்..."அனகா.... நீங்க எப்படி இங்க வந்திங்க"...
என்று அந்த நபருக்கு பயந்தப்படி வைரம் அனகாவை கேள்வி கேக்க...." ம்.... என் காருல வந்தேன்.. " என்று அனகா சொன்னதும்... வைரம் கடுப்பானவள்...
" ஐயோ அதை கேக்கல.... நான் இங்கே இருக்கேன்னு தெரிந்து நீங்க எப்படி இங்க வந்திங்கன்னு கேட்டேன்.. "
என்று வைரம் இக்கட்டான சூழ்நிலையிலும் தெளிவாக கேள்வியை கேக்க....