🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று 1️⃣9️⃣
👉காக்கும் கடவுள் யார்???
*************************************************
வசீகரன் ..... மாயன் மீது உள்ள கோவத்தில் தன் நடையில் வேகம் கூட்டியவனை நோக்கி மாயன் அதிவேகமாக ஓடி வந்தவன் எதிரில் வந்த காரில் மோதி.... கீழே விழுந்த மாயனை பார்த்த வசீகரன்..
" மாயா " என்று கத்தியப்படி இவன் அருகில் ஓடிவந்தவன்... கீழே மயங்கிய நிலையில் இருந்த மாயனை மடி மீது தாங்கி கொள்ள...
காரில் இருந்து செயற்கை இரும்பு கால்களை பொறுத்திக்கொண்டு பத்திரிக்கையாளர் அக்னி @ ஆனந்த நாராயணன் இறங்கி வந்தவன்...
என்னாச்சு....
நகருங்க.... நான் பாக்குறேன்..
என்று சொன்னவனை பார்த்து புருவம் உயர்த்திய வசீகரன்..."காருல என் மாயாவை மோதியது மட்டும் இல்லாமல் என்னாச்சுன்னு வேற கேக்குறீங்க"....
என்று வசீகரன் அக்னியை கோவித்துக்கொண்டு பேசியப்படி அக்னியின் முகத்தை பார்த்தவன்...
"நீங்க.... நீங்க பத்திரிகையாளர் அக்னி தானே"...
என்று வசீகரன் கேட்கும் கேள்விக்கு"ஒ.... Mr. கரன், நீங்களா....Sorry... நான் ஒழுங்கா தான் வண்டி டிரைவ் பண்ணேன்... இவரு தான்"...
என்று அக்னி சொன்னதும்.... பெரிதும் அலட்டிகொள்ளாத வசீகரன்...
"Pls.... உங்க காருல தண்ணி இருந்தா தாங்க"....
என்று வசிகரன் கேட்டதும்....
"One மினிட்".... என்று எழுந்தவன்...காரில் உள்ள தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்த வசீகரனிடம் நீட்ட....
வசீகரன் தண்ணீரை மாயனின் முகத்தின் மீது தெளித்ததும்... பின் தலையில் லேசான வலியோடு கண்களை திறந்த மாயன்...
"மச்சி... நான் எங்க டா இருக்கேன்"...
என்று சினிமா வசனம் பேச..... வசீகரன் தண்ணீர் பாட்டிலை கொண்டு அவனை தாக்கியவன்.."மனசுல பச்ச பிள்ளைன்னு நினைப்பா... ரோடை இப்படியா கிராஸ் பண்ணுவ"...
என்று வசீகரன் மாயனை கடிந்து கொள்ள....