சுற்று 31

120 15 3
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று3️⃣1️⃣

👉யாமினி மர்க்கயா ...??

***************************************************

ஆனந்த் நாராயணன் @ அக்னியின் Press வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு...அனகா, தினேஷ் மற்றும் அக்னி குழப்பதுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள...

அனகா - யாரு ஆனந்த் இந்த நேரத்துல....

தினேஷ் - அதானே... இந்த நேரத்துல யாரு...

அக்னி - நீங்க இங்கேயே இருங்க... நான் போய் பாக்குறேன்...
என்று சொன்ன அக்னி.... தயங்கியப்படி வாசல் கதவை திறக்க.... வந்தது யாரென்று அனகாவும் தினேஷும் வாசலை எட்டி பார்க்க....

இவர்கள் கண் முன்...நின்று இருந்தார் அனாகவின் தாத்தா டெல்லி கணேஷ்...

"தாத்தா...நீங்க ஏன் இங்க வந்திங்க."...
என்று அனகா அவரை முறைக்க....

டெல்லி கணேஷ் - உனக்கு நான் எத்தனை முறை போன் பண்ணுறது.

அனகா - போன் னா... ஐயோ நான் ஸைலேண்ட்ல போட்டு இருக்கேன்... So பாக்கல..சரி அது இருக்கட்டும்... நீங்க ஏன் இங்க எல்லாம் வரீங்க....

டெல்லி கணேஷ் - நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் போன் பண்ணேன்... ஆனா நீ போனை எடுக்கல.... சரி... கழுதை கெட்டா குட்டி சுவருன்னு அறிந்து தான்...இங்க வந்தேன்...

அனகா - இப்போ ஏன் நீங்க தேவை இல்லாம பேசுறீங்க... நீங்க வீட்டுக்கு போங்க... நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்....

டெல்லி கணேஷ் - அனா... நிலைமை தெரியாம பேசாத.... முதல்ல நீ என்கூட வா...

அனகா - இப்போ ஏன் நீங்க இவ்வளவு அவசரபடுறிங்க..

டெல்லி கணேஷ் - நீ இங்க வா நான் உன்கிட்ட knjm தனியா பேசனும்

அனகா - என்ன விஷயம்... எதுவா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க..

டெல்லி கணேஷ் - ஐயோ அனா.. நிலைமை தெரியாம பேசாத...நீ முதல்ல என்கூட கிளம்பி வா...

அக்னி - அனா.. அதான் தாத்தா எதோ முக்கியமான விஷயம்ன்னு சொல்லுறாரு இல்ல... நீ போ... நம்ம நாளைக்கு பேசலாம்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now