🐏ஆடு புலி ஆட்டம் 🐅
👉சுற்று2️⃣8️⃣
👉யாரு பா அது ....??
***************************************************
இடம்..... அனாகவின் பங்களா.....
"என்ன அனா கிளம்பிட்டியா".....
என்று கேட்டுக்கொண்டே டெல்லி கணேஷன் அனகாவின் அறைக்குள் நுழைய....... அனகாவோ தன் கையில் ஒரு போட்டோ ஆல்பத்தை வைத்து பார்த்து கொண்டு இருந்தாள்...." அனா.... நேரமாகுது பாரு.... வா போகலாம்" என்று.... அனகாவை அழைத்த டெல்லி கணேஷ்... அவள் தோள்களை குலுக்க.
" என்ன தாத்தா... கிளம்பிட்டீங்களா " என்றாள் அனகா....
" என்ன.... ஆல்பதை பார்த்து பழைய நினைவுகளை எல்லாம் யோசிச்சு பாக்குறியா... " என்று டெல்லி கணேஷ் கேக்க.....
" அதையெல்லாம் மறந்தால் தானே மீண்டும் நினைக்க.... " என்று அனகா சொன்னதும்.... டெல்லி கணேஷ் அந்த ஆல்பத்தை பார்க்க.... அதில் இவரின் பேரன் பேத்தி இருவரின் புகைப்படங்கள் மட்டுமே நிறைந்து இருந்தது.....
" சரி அனா... வா நேரமாகுது பாரு " என்று சொன்ன டெல்லி கணேஷ்... அந்த ஆல்பத்தை வாங்கி மேசை மேல் வைத்தவர்.... அனகாவை அழைத்து கொண்டு..... "பேசும் விழிகள்" என்ற ஆஸ்ரமத்திற்கு சென்றார் ...
அந்த ஆஸ்ரமத்தில் பல குழந்தைகள் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்க பட்டு இருந்தனர்.....
அனகா அந்த ஆஸ்ரமத்திற்குள் நுழைந்ததும்...
"டேய் பசங்களா .... அனா வந்து இருக்காங்க பாருங்க.... ஓடி வாங்க"....
என்று ஒரு குரல் கேக்க.... பல குழந்தைகள் அனகாவை அன்பாக சூழ்ந்து கொண்ட நிலையில்..... அனகா மகிழ்ச்சியில் நிறைந்து இருந்தாள்..."அனா... நீ ஏன் எங்கள பாக்க இத்தன நாளா வரல"....
என்று தன் கரங்களால் அனகாவின் கைகளை தழுவி கொண்டே பார்வை இல்லாத பத்து வயது நிரம்பிய பெண் குழந்தை உரிமையாக கேக்க...... அனகா அந்த பெண்ணை தன் இதயத்தோடு அணைத்து கொண்டவள்...."எனக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு மா.... அதான் வர முடியல".....
என்று அனகா பொறுமையாக பேசும் அழகை பார்த்து டெல்லி கணேஷ் மகிழ்ந்து இருந்த நிலையில்....